சீன தலைநகரான பீஜிங்கில் இருந்து 1,000 உற்பத்தி நிறுவனங்களை நீண்ட காலத் திட்டமாகவும், பொருளாதாரத்தினைச் சீர் திருத்தம் செய்யவும் மூட இருப்பதாக நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
பீஜிங் அருகில் உள்ள நகரங்கள் மூலமாகச் சரிசமமாக நிறுவனங்களைப் பிரித்துப் பொருளாதாரத்தினை மாற்றி அமைக்க இருப்பதாக இதன் மூலமாக ஹெபியில் புதியதாக வளர்ச்சி பணிகள் நடக்க உள்ளது.
இதே போன்று 10 வருடத்தில் 300 சந்தைகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மையங்களை மூட இருப்பதாகவும் பீஜிங், டைஜின், ஹெப்பி ஆகிய இடங்களில் இண்டக்ரேஷன் பணிகள் நடைபெற உள்ளது.
பீஜிங்கிள் தற்போது 22 மில்லியன் மக்கள் வசிப்பதாகவும் இதனைக் குறைப்பதற்கான நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது. 2018-ம் ஆண்டில் மட்டும் இத்தி திட்டத்தின் கீழ் 500 நிறுவனங்களும் 176 சந்தைகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மையங்களைப் பீஜிங்கிள் மூடிவிட்டு அருகில் உள்ள புற நகர் பகுதிகளில் அமைக்க உள்ளனர். இதில் பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவ மணைகளும் அடங்கும்.
2018-ம் ஆண்டின் பட்ஜெட் படி 12.2 பில்லியன் யூயானை முதலீடு செய்யப் பீஜிங் திட்டமிட்டுள்ளது.