உடல் நலம் குறித்துச் சீன மக்களிடம் திடீர் என்று விழிப்புனர்வு வந்துள்ளது என்று கூறும் அளவிற்கு மிகப் பெரிய அளவில் உணவு கலாச்சாரத்தில் சீனர்கள் சைவ பிரியர்களாக மாறி வருகின்றனர்.
சர்வதேச அளவில் மாட்டிறைச்சி, பன்றிக்கறி மற்றும் கோலி இறைச்சிகளை அதிகளவில் நுகரும் நாடு என்ற பெருமை சீனாவிற்கு இருந்த வந்த நிலையில் அது விரைவில் மாறவும் வாய்ப்புள்ளது.
இறைச்சி ஏற்றுமதி
இந்தியாவில் இருந்தும் சீனாவில் மாட்டிறைச்சி இறக்குமதி செய்ய 2017 ஆண்டுத் தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சர்வதேச அளவில் அதிக மாட்டிறைச்சியினை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.
சைவ உணவகங்கள்
சீனாவின் முக்கிய நகரான ஷாங்காயில் 2012-ம் ஆண்டு வரை 49 சைவ உணவகங்கள் மட்டுமே இருந்ததாகவும் தற்போது 100-ஐ விட அதிகமாக உள்ளதாகவும் சைவ உணவு விரும்பிகள் கூறுகின்றனர்.
சரிந்த விற்பனை
2014-ம் ஆண்டுச் சீனாவில் 42.49 மில்லியன் டன் அளவில் பன்றிக்கறி விற்பனை செய்யப்பட்டதாகவும் 2016-ம் ஆண்டு 40.85 மில்லியன் டன்னாகச் சரிந்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.
காய்கறி மற்றும் பழங்கள்
இறைச்சி விற்பனை சரிந்து வரும் அதே நேரத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இறக்குமதி அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. சீனாவின் இறைச்சி சந்தையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 150 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியாகி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியர்கள்
சர்வதேச அளவில் இந்தியாவில் தான் அதிகப்படியாக 500 மில்லியன் சைவ பிரியர்கள் உள்ளதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற நோய்கள் அதிகரித்து வருவதால் தான் சீனர்கள் அசைவத்தில் இருந்து வெளியேறி சைவ உணவிற்கு மாறிவருகின்றனர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.