அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவின் அறிவு சார் திருட்டு குறித்து முக்கிய விவரங்கள் சிக்கியுள்ளதாக அபராதம் விதிக்க இருப்பதாகப் புதன்கிழமை குறிப்பிட்டுள்ளார். சீனாவுக்கு எதிராக டிரம்ப் எடுக்க இருக்கும் வர்த்தகப் போர் போல இது உள்ளது.
அமெரிக்க நிறுவனங்களின் அறிவு சார் சொத்துக்களை வலுக்கட்டாயமாக வணிக நோக்கத்தின் கீழ் சீனா பெற்று வருவதாக டிரம்ப் மற்றும் அவரது பொருளாதார ஆலோசகரான கேரி கோன் இருவரும் நேற்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
வணிக ரீதியாக விசாரணை
இது குறித்து வணிக ரீதியாக விசாரணை நடத்து அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளாதாகவும் இதன் நடவடிக்கைகளை இன்னும் சில நாட்களில் தெரியவரும் என்று தெரியவந்துள்ளது.
அபராதம்
அதே நேரம் நாங்கள் அறிவு சார் திருட்டுக்கு எதிராக மிகப் பெரிய அபராதத்தினை விதிக்க இருக்கிறோம் என்று டிரம் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் என்ன அபராதம் என்று டிரம்ப் குறிப்பிடவில்லை.
சேதம்
நாங்கள் மிகப் பெரிய சேதங்கள் குறித்து மட்டும் பேசி வருகிறோம், நாங்கள் எவ்வளவு விவரங்கள் திருடப்பட்டுள்ளது என்பது குறித்துக் கூறினால் அனைவரும் மிரண்டு விடிவார்கள் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வணிகர்கள்
அமெரிக்க வணிகர்கள் நாங்கள் பில்லியன் கணக்கிலான லாபம் மற்றும் மில்லியன் கணக்கிலான வேலை வாய்ப்பினை இழந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
நல்லுறவு
நாங்கள் சீனாவுடன் நல்லுறவை கடைப்பிடிக்கவே விரும்புகின்றோம் ஆனால் பீஜிங் அதற்கு எங்களை விடவில்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
கருவூல பத்திரங்களில் முதலீடு
மேலும் சீன அரசு அமெரிக்கக் கருவூல பத்திரங்களில் முதலீடு செய்யத் தன்னுடன் விவாதித்து வருவதாகக் கூறுவதில் உண்மை இல்லை. இதுபோன்ற ஒரு தவறான முடிவுக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்கமாட்டேன் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.