எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதியில் திடீர் என்று வரிகளை வாரி ஏற்று அறிவிப்பினை வெளியிட்ட ஒரே நாளில் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை "வர்த்தகப் போர்கள் நல்லது, வெற்றி பெற எளிதானது" என்று ட்வீட் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வியாழக்கிழமை இறக்குமதி செய்யும் ஸ்டீல் மீது 25 சதவீதமும், அலுமினியம் மீது 10 சதவீதமும் வரியை ஏற்றி உள்ளூர் உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாக அறிவித்துள்ளார். இதனால் இந்தியா உள்ளிட்ட அதிக ஸ்டீல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வணிகம் பெறும் அளவில் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா
அமெரிக்கா பில்லியன் கணக்கில் இழப்பினை சந்திக்கும் போது வர்த்தகப் போரில் ஈடுபடுவதில் தவறு இல்லை என்று கூறியுள்ளார். ஒரு நாட்டினை விட 100 பில்லியன் டாலர் குறைவாக இருக்கும் போது அவர்களுடனான வர்த்தகத்தினை நிறுத்தினாலே போது வெற்றி கிடைத்து விடும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கச் சந்தை
டொனால்டு டிரம்ப்பின் இந்த அறிவிப்பினால் ஏசியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதிலும் இந்திய வணிகர்கள் அதிகளவில் ஈடுபட்டு வரும் ஸ்டீல் வணிகத்தில் அமெரிக்கச் சந்தை போனால் மிகப் பெரிய இழப்பு இவர்களுக்கு ஏற்படும்.
இந்தியாவுக்குச் சிக்கல்
இந்திய ஸ்டீல் நிறுவனங்கள் ஏற்கனவே அதிக அளவில் கடன் பெற்றுள்ளன. இந்தியாவிற்கு மிகப் பெரிய சிக்கலாக இது உருவாகும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
உலக நாடுகள்
இறக்குமதி செய்யும் ஸ்டீலுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்க வேலை வாய்ப்பு அதிகளவில் பாதிக்கப்படாமல் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பிற நாடுகளில் உள்ளவர்களுக்கு வலை வாய்ப்பு அடிப்படுவது மட்டும் இல்லாமல் பொருளாதாரமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.