துபாயில் 2016 அல்லது அதற்கு முன்பு விதிக்கப்பட்ட டிராப்பிக் அபராதங்களை 2017-ம் ஆண்டுக்குள் செலுத்தினால் 50 சதவீதம் வரை சலுகை அளிக்கப்படும் என்று துபாயில் காவல் துறை அறிவித்துள்ளது.
துபாய் காவல் துறையில் டிராப்பிக் பிரிவு தலைவரான பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸூரி வாகன ஓட்டுநர்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்தி அபராதங்களைச் செலுத்தி பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
யாருக்கெல்லாம் சலுகை கிடைக்கும்?
துபாயில் டிராப்பிக் விதிகளை மீறியதற்காக 2016 அல்லது அதற்கு முன்பு வரை யாருக்கெல்லாம் அபராதம் விதிக்கப்பட்டு இன்னும் செலுத்தாமல் உள்ளார்களோ அவர்கள் 2017 இறுதிக்குள் அபராதம் செலுத்தினால் 50 சதவீதம் சலுகை அளிக்கப்பட உள்ளது.
2017 ஆண்டு அபராதத்திற்குச் சலுகை
இதில் 2017 நிதி ஆண்டில் டிராப்பிக் விதிமுறைகளை மீறியவர்களுக்கு அளிக்கப்படாது என்றாலும் 2017 ஜூலை 1 வரை வாகன விதிகளை மீறியவர்களுக்கு இந்தச் சலுகை அளிக்கப்படும் என்று துபாய் காவல் துறை கூறியுள்ளது. இந்தச் சலுகை 2017 டிசம்பர் 31 வரை மட்டுமே வாகன ஓட்டுநர்களுக்குக் கிடைக்கும்.
அபராதத்தினை எங்கு எல்லாம் செலுத்தலாம்?
துபாய் காவல் துறை அபராதத்தினை டிராப்பிக் காவல் அலுவலகம், அனைத்துக் காவல் நிலையங்கள் , கார் பதிவு அலுவலகங்கள், மால்களில் உள்ள கியாஸ்க் போன்றவற்றின் மூலம் செலுத்தலாம் என்று கூறியுள்ளது.
சலுகை எப்படிக் கிடைக்கும்?
மேலும் அபராத தொகையினை இணையதளம், யூஏஈ வங்கி தளங்கள் மற்றும் ஆர்டிஏ மையங்களில் செலுத்த வசதிகள் செய்துள்ளது. அபராதம் செலுத்தும் போது தானாகவே இந்த 50 சதவீத சலுகையைப் பெற முடியும்.