எப்போதும் நாம் பணிபுரியும் இடத்தில் நேர்மையாகவும், நேரம் தவறாமலும் இருக்க வேண்டும். இதில் ஒருபடி மேல் இருப்பது ஜப்பான் நாடு, அந்நாட்டில் அரசு அதிகாரிகள், அரசு சேவைகள் கூடச் சரியான நேரத்தில் இயங்கும். குறிப்பாக ஜப்பானின் அதிவேக ரயில் சில நொடிகள் தாமதமாக வந்தாலும் பணிகளுக்கு ஜப்பான் அரசு மன்னிப்புக் கடிதம் அளிக்கும்.
இப்படிப்பட்ட ஜப்பானில் மதிய உணவிற்காக 64 வயதாக ஒரு ஊழியர் 3 நிமிடம் குறித்த நேரத்திற்கு முன்னதாகச் சென்றுள்ளார். அதற்கு அவர் பணியாற்றும் நிறுவனம் அரை நாள் சம்பளத்தைப் பிடித்துக்கொண்டது.
26 முறை
ஜப்பான் நாட்டின் கோப் நகரில் இருக்கும் வாட்டர்வொர்க்ஸ் பீரோ நிறுவனத்தில் பணியாற்றும் 64 வயதான ஊழியர் கடந்த 7 மாதத்தில் 26 முறை மதிய உணவு நேரமான 12 மணிக்கு முன்னதாகச் சென்றுள்ளார்.
3 நிமிடம்
அவர் சென்ற அதிகப்படியான நேரம் வெறும் 3 நிமிடம் தான், ஆயினும் அவரது அரைநாள் சம்பளத்தைத் தண்டனையாக இந்நிறுவனம் பிடித்துக்கொண்டது. இதுமட்டும் அல்லாமல் இப்படி நடந்ததற்குச் செய்தியாளர்களிடமும் மன்னிப்பும் கேட்டுள்ளார் இந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்.
பணி இடைநீக்கம்
அதேபோல் மற்றொரு நிறுவனம், தனது ஊழியர் ஒருவர் ரெடிமேட் மதிய உணவை வாங்கப் பலமுறை பணி நேரத்தில் சென்றுள்ளதை நிர்வாகம் கணக்கிட்டுள்ளது, இதில் அவர் 6 மாதத்தில் சுமார் 55 மணிநேரம் பணியில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்தியா
நம் நாட்டிலும் இப்படியொரு நடைமுறையைக் கொண்டு வந்தால் எப்படி இருக்கும்..?
உங்கள் பதிலை கருத்து பதிவிடும் தளத்தில் பதிலிடுங்கள்.