பேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் நிறுவனர்களான கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மை க்ரீகர் இருவரும் செப்டம்பர் மாதம் ராஜிநாமா செய்தனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது இன்ஸ்டாகிராமின் வளர்ச்சி பிரிவின் தலைவரான பாங்காளே காபா மற்றும் முக்கியத் தொழில் நுட்ப துறை அதிகாரியான அமீத் ராணாடைவ் இருவரும் ராஜிநாமா செய்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் நிறுவனம் கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மை க்ரீகர் இருவரையும் தொடர்ந்து பாங்காளே காபா மற்றும் அமீத் ராணாடைவ் உள்ளிட்டோர்கள் வெளியேற இருக்கின்றனர் என்பதை ஊழியர்கள் மத்தியில் உறுதி செய்துள்ளது.
பாங்காளே காபா
பாங்காளே காபா பேஸ்புக் நிறுவனத்தின் முக்கிய அதிகாரியாக இருந்ததுடன் இன்ஸ்டாகிராமின் வளர்ச்சிக்கும் மிகப் பெரிய அளவில் பாடுபட்டுள்ளார்.
அமீத் ராணாடைவ்
அமீத் ராணாடைவ் டிவிட்டர் நிறுவனத்தின் விளம்பர தயாரிப்புகளின் முக்கிய அதிகாரியாக இருந்து வந்தார். பின்னர் டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து 2017-ம் ஆண்டு வெளியேறி இன்ஸ்டாகிராம் நிறுவனத்தில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் - இன்ஸ்டாகிராம்
பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தினை 2012-ம் ஆண்டு 1 பில்லியன் டாலர் அளித்து வாங்கியது. இதில் 1 பில்லியனுக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக்க இருந்து புகைப்படம், வீடியோ மற்றும் தகவல் பரிமாற்றங்களைச் செய்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் ஸ்னாப் ஷாட் போட்டியாக 2016-ம் ஆண்டு 24 மணி நேரத்தில் மறையக் கூடிய ஸ்லைட்ஷோ சேவையினையும், ஸ்டோரிஸ் சேவையினையும் வழங்கியது.
வருவாய்
பேஸ்புக் நிறுவனத்தினை விட அதிக வருவாயினை ஈட்டும் நிறுவனமாக இன்ஸ்டாகிராம் வளர்ந்து வந்தது. ஆனால் ஐரோப்பிய தனியுரிமை சட்டம் போன்றவற்றால் இரண்டு நிறுவனங்களின் வருவாயும் சரிந்தது.
வாட்ஸ்ஆப்
பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா சர்ச்சையில் சிக்கிய சில நாட்களில் அதன் துணை நிறுவனமான வாட்ஸ்ஆப்-ன் இணை நிறுவனர் ஜான் கோம் பேஸ்புக்கை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அடுத்தது பேஸ்புக் நிறுவனத்தினை விட்டுத் துணை நிறுவனங்களின் தலைவர்கள் வெளியேறி வருவது சர்ச்சையினை ஏற்படுத்தி வருகிறது.
மார்க் ஜூக்கர்பெர்க்
மார்க் ஜூக்கர்பெர்க் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருவதினால் பேஸ்புக் நிறுவனப் பங்குகளின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் முக்கிய முதலீட்டாளர்கள் அவரை நிறுவனத்தினை விட்டு வெளியேறக் கோரிக்கை வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.