சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், லிபியா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை பொதுச் சந்தைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் லிபியா நாட்டில் இருந்து ஒரு நாளுக்குப் பல லட்ச பேரல் கச்சா எண்ணெய் தற்போது சந்தைக்கு வருகிறது. இதற்கு அடிப்படையாக ஈரான் மீது அமெரிக்க விதிக்கப்பட்டு இருந்த தடைகள் கணிசமாகத் தளர்ந்துள்ளதால் தற்போது லிபியா கச்சா எண்ணெய் பொதுச் சந்தைக்கு வந்துள்ளது.
இதன் மூலம் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்காக அதிகளவில் இறக்குமதி செய்யும் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை புதன்கிழமை வர்த்தகத்தில் 6 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
மேலும் லிபியா தேசிய எண்ணெய் கார்ப்ரேஷன் அமைப்பு தனது ஏற்றுமதி தளத்தில் இருந்து ஏற்றுமதியைத் துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் லிபியாவில் இருந்து முதற்கட்டமாக 7,00,000 பேரல் கச்சா எண்ணெய் பொது விற்பனை சந்தைக்கு வருகிறது.
இதன் எதிரொலியாகக் கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் கணிசமாகத் தளர்ந்துள்ளது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் இந்தியா, இந்த விலை சரிவால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.