வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கும் விதமாகவும், திறன் அதிகமுடைய ஊழியர்கள் மட்டும் தன் நாட்டில் பணி செய்ய அனுமதி அளிக்கவும் அமெரிக்கா ஹெச்1பி விசாவில் அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
சிங்கப்பூர்
வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வொர்க் பர்மிட்-ஐ வழங்கத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாட்டுக்களை விதித்து வருகிறது சிங்கப்பூர். இந்தியாவின் பல பெரிய நிறுவனங்கள் சிங்கப்பூரில் இயங்கி வருகிறது. குறிப்பாக ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகியவை சிங்கப்பூரில் உள்ளது.
பிரபலம்
நிதி திரட்டல் மற்றும் வரி விதிப்பு கொள்கையின் மூலம் சிங்கப்பூர் ஹோல்டிங் நிறுவன கலாச்சாரம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்தியில் மிகவும் பிரபலம். உதாரணமாகப் பிளிப்கார்ட்.
முன்பு ஹோல்டிங் நிறுவனங்களைச் சிங்கப்பூரில் துவங்குவது மிகவும் எளிதாக இருந்த நிலையில் தற்போது அதிகக் கட்டுப்பாடுகள், அதிகக் கட்டணம், அதிகக் காலம் தேவைப்படுகிறது.
வேலைவாய்ப்பு
இந்நிலையில் கடந்த சில வருடங்களாகச் சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஒரு நிறுவனத்தில் இருக்கும் சிங்கப்பூர் ஊழியர்கள், வெளிநாட்டு ஊழியர்கள், குடியுரிமை பெற்ற ஊழியர்கள் எனப் பல்வேறு காரணிகளைக் கவனித்து வருகிறது.
எம்பிளாய்மென்ட் பாஸ்
திறன்வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் பணியாற்ற வேண்டுமென்றால் எம்பிளாய்மென்ட் பாஸ் மூலம் பணியாற்றலாம். இதைவாங்க குறைந்தபட்சம் 3,600 சிங்கப்பூர் டாலர் சம்பளமாகப் பெற வேண்டும்.
இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1.6 லட்சம் ரூபாய். இது 2014ஆம் ஆண்டில் 3,300 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எஸ் பாஸ்
மிட்லெவல் ஊழியர்கள் எஸ் பாஸ் வழியாகப் பணியாற்றலாம். இதற்குக் குறைந்தபட்சம் சம்பள அளவு ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து 2,300 டாலராக உயர்த்தியுள்ளது சிங்ப்பூர் அரசு.
புதிய மாற்றம்
சிங்கப்பூர் அரசின் வேலைவாய்ப்புத் தளத்தில் 14 நாட்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து விளம்பரம் செய்யத் தனது நிறுவனத்தில் குறைந்தது 10 ஊழியர்கள் 15,000 சிங்கப்பூர் டாலருக்குக் குறைவான சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது.
குறைந்தபட்சம் சம்பளம்
அமெரிக்கா தடாலடியாக ஹெச்1பி விசாவிற்காகக் குறைந்தபட்சம் சம்பள அளவை உயர்த்திய நிலையில் சிங்கப்பூர் குறைவான அளவிலேயே சம்பள அளவுகளை உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் கணிசமான பாதிப்புகளை இந்திய ஊழியர்களும், இந்திய நிறுவனங்களும் சந்திக்கும் எனத் தெரிகிறது.