உலகின் முன்னணி சமுக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் மைக்ரோ பிளாகிங் சேவை அளிக்கும் டிவிட்டர் நிறுவனங்களும் முற்றிலும் மாறுபட்ட ஒரு போட்ட ஷேரிங் நிறுவனமான ஸ்னாப்சேட் பல போட்டிகள், பிரச்சனைகளுக்கு மத்தியில் மக்கள் மத்தியில் வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் அனைத்து டெக்னாலஜி நிறுவனங்களைப் போலவே ஸ்னாப்சேட் நிறுவனமும் பங்குச்சந்தையில் இறங்க தற்போது முடிவு செய்துள்ளது.
ஸ்னாப் இன்க்
இதன்படி ஸ்னாப்சேட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஸ்னாப் இன்க் பங்கு மற்றும் பரிவர்த்தனை கமிஷன் அமைப்பிடம் ஐபிஓவிற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியானது.
25 பில்லியன் டாலர்
இந்த ஐபிஓ விண்ணப்பத்தில் ஸ்னாப்சாட் நிறுவனம் 3 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் பட்டியலிடப்போகும் இந்நிறுவனம் சுமார் 25 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை ஈர்க்கும் எனத் தெரிகிறது.
ஸ்னாப்
நியூயார்க் பங்குச்சந்தையில் ஸ்னாப் என்ற பெயரில் இந்நிறுவனம் பட்டியலிட உள்ளது.
ஈவன் ஸ்பீகெல்
26 வயதான ஈவன் ஸ்பீகெல் ஸ்னாப்சாட் நிறுவனத்தின் சீஇஓ ஆவார், கடந்த நிதியாண்டில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் இந்நிறுவனம் புதிதாக மெசேஜிங் சேவைத் துவங்க திட்டம் தீட்டியுள்ளது. இதன் மூலம் ஸ்னாப்சாட் பேஸ்புக் நிறுவனத்திற்கு மிகப்பெரிய போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடு
நீயூயார்க் பங்குச்சந்தையில் இறங்கிய 90 சதவீத நிறுவனங்கள் வெற்றிக்கனியை பறித்துள்ள நிலையில், ஸ்னாப்சாட் நிறுவனத்திற்கும் வெற்றி நிச்சயம்.
இந்நிலையில் முதலீட்டாளர்களுக்கு இது சிறப்பான வாய்ப்பாக அமையும். மேலும் குறைந்தது 1 வருடத்தில் முதலீட்டு மதிப்பு இரட்டிப்பாகும்.