அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) அமைப்பு வழக்கமான எச்-1பி விசா விண்ணப்பங்கள் அதிகம் தேக்கம் அடைந்துள்ளதால் ஆறு மாதத்திற்கு சில நிறுவனங்கள் வேகமாக விசாக்கள் பெற முயலும் பிரீமியம் விசா விண்ணப்பங்களுக்கு 6 மாதங்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
எச்-1பி விசா வழங்குவதற்கு முழுமையான தடை விதிக்கவில்லை என்றும், பிரீமியம் முறையை மட்டுமே தடை விதித்திருப்பதாகவும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரீமியம் விசா கட்டணம்
இந்த பிரீமியம் விசாக்களை பெற நிறுவனங்கள் 1,125 டாலர்கள் வரை கூடுதல் கட்டனம் செலுத்தும் போது வழக்கமான எச்-1பி விசா வழங்குவதை விட வேகமாக செயல்படுத்த கூடிய முறை ஆகும். இப்படி கூடுதல் கட்டணம் செலுத்துவதன் மூலம் விண்ணப்பதாரரின் பெயர் எச்-1பி விசா பெற பட்டியலில் முதல் இடத்திற்கு சென்று விடும்.
வழக்கமான எச்-1பி விசா
இந்த இடைக்கால தடையின் மூலம் வழக்கமான எச்-1பி விசா வழங்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) அமைப்பு தெரிவித்துள்ளது.
வழக்கமான எச்-1பி விசாவிற்கும் பிரீமியம் கட்டணம் பெறுவதற்கும் என்ன வித்யாசம்..?
வழக்கமாக எச்-1பி விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது விசா பெறுவதற்கு 3 மாதம் கால அவகாசம் எடுக்கும். ஆனால் பிரீமியம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் போது 15 நாட்களில் விசா பெற முடியும்.
தடை எப்போது முதல்
பிரீமியம் எச்-1பி விசா பெறுவதற்கான தடை வரும் ஏப்ரல் மாதம் 3 தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எச்-1பி விசா
எச்-1பி விசா என்பது வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வந்து பணிப் புரிவதற்காக வழங்கப்படும் விசா ஆகும். இதற்கு சிறப்பு தகுதிகள் தேவை. இந்திய டெக் நிறுவனங்கள் அதிக அளவில் இந்த எச்-1பி விசாவை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.