சர்வதேச அளவில் முன்னணி அழகு சாதன பொருட்களை தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் லோரியல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் உலகின் பணக்காரப் பெண்களில் ஒருவரான லில்லியன் பெட்டென்கோர்ட் மறைந்தார்.
செப்டம்பர் 21, வியாழக்கிழமை தனது 94 வயதில் லில்லியன் பெட்டென்கோர்ட் மறைந்தார்.
பெட்டென்கோர்ட் குடும்பம்
லோரியல் என்ற மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜியத்தை உருவாக்கியது பெட்டென்கோர்ட் குடும்பம். கடந்த 50 வருடத்தில் லோரியல் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் நிர்வாகத்தில் பல மாற்றங்களை சந்தித்தாலும், இந்நிறுவனத்தின் நிர்வாக குழுவில் 33 சதவீத பங்குகளுடன் பெட்டென்கோர்ட் குடும்பம் ஆதிக்கம் செலுத்துகிறது.
லில்லியன் பெட்டென்கோர்ட்
லோரியல் நிறுவனத்தின் பங்குகள் மற்றும் அவரது பிற சொத்துக்களின் மதிப்பு மட்டும் சுமார் 36.21 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரான்கோசி பெட்டென்கோர்ட் மேயர்ஸ்
லில்லியன் பெட்டென்கோர்ட் மறைவு குறித்து தனது வருத்தத்தையும், வர்த்தகம் தொடந்து சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கையும் தனது மின்னஞசலில் தெரிவித்தார் ப்ரான்கோசி பெட்டென்கோர்ட் மேயர்ஸ்( Françoise Bettencourt Meyers). இவர் தான் லில்லியன் பெட்டென்கோர்ட் அவர்களின் அதிகாரப்பூர்வ மகள் ஆவார்.
40..." data-gal-src="http:///img/600x100/2017/09/22-1506079770-loreal.jpg">