வங்கித்துறையைச் சார்ந்த பங்குகளின் தொடர் வீழ்ச்சியினால், முதலீட்டாளர்களின் பார்வை தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகளின் பக்கம் நோக்கி விழுந்துள்ளது. மிக மந்தமான வளர்ச்சியைக் காட்டிவரும் இந்தியப் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்பு, கட்டுமானம், உற்பத்தி துறைகளின் பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை பெறவில்லை. மேலும் FMCG மற்றும் மருத்துவ துறை பங்குகளின் விலை உச்சத்தில் நிலை கொண்டுள்ளன.
2014 ஆம் நிதி ஆண்டில் தகவல் தொழில் நுட்ப துறையின் பெரும் நிறுவனங்களின் சிறப்பான முதல் காலாண்டு முடிவுகளினால், வருங்காலத்திலும் அவற்றின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
டாடா கன்சல்டன்சி மற்றும் ஹெச்சில் நிறுவனங்கள் எதிர்காலத்தில் நன்றாக செயல்படும் என்ற நம்பிக்கையை தந்துள்ளன. அதைப்போலவே இன்போசிஸ் நிறுவனமும் எதிர்பார்த்த இலாபத்தை ஈட்டியுள்ளது.
பின்வரும் நாட்களில், இந்த நிறுவன பங்குகளின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்பது பங்குச்சந்தை வல்லுனர்களின் கணிப்பு.
https://www.goodreturns.in/news/2013/08/02/shares-infosys-tcs-hcl-tech-hit-52-week-highs-194937.hstml