இந்திய தயாரிப்புகளில் எத்திலீன் ஆக்சைடு என்ற கேன்சர் பாதிப்பு உண்டாக்கும் கெமிக்கல் இருப்பது கண்டுப்படிக்கப்பட்டதன் வாயிலாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்புகள் தடைச் செய்யப்பட்டது அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளையில் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் நடத்திய சோதனைகளில், இந்திய உணவுப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் இந்த 'எத்திலீன் ஆக்சைடு' (Ethylene Oxide) கெமிக்கல் கலப்படம் இருப்பது தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது என டெக்கான் ஹெரால்டு தெரிவித்துள்ளது.

ஆனால் இதுவரை, இந்த ரசாயனத்தின் பயன்பாட்டைத் தடைச் செய்ய எந்த நடவடிக்கையும் இந்திய அதிகாரிகள் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது எனவும் கூறப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 2020 முதல் ஏப்ரல் 2024 வரையிலான காலகட்டத்தில், ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் நடத்திய சோதனைகளில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட 527 உணவுப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதில் 313 மாதிரிகள் முந்திரி, எள் போன்ற பொருட்களிலும், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் (60), உணவுக் கட்டுப்பாடு உணவுகள் (48) மற்றும் பிற உணவுப் பொருட்கள் (34) ஆகியவற்றில் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது.
எத்திலீன் ஆக்சைடு உள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய 87 ஷிப்பிங் கன்சையின்மென்ட் துறைமுக எல்லையிலே தடுத்து நிறுத்தப்பட்டன. மீதமுள்ள பொருட்கள் சந்தைக்குச் சென்ற பின்பு ஐரோப்பிய அதிகாரிகளின் நடவடிக்கையில் இருந்து நீக்கப்பட்டன என்றும் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
எத்திலீன் ஆக்சைடு என்பது நிறமற்ற ஒரு வாயு, இது பூச்சிக்கொல்லி மற்றும் கிருமி நீக்கம் செய்யும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த எத்திலீன் ஆக்சைடு உண்மையில் மருத்துவக் கருவிகளில் இருக்கும் கிருமியை நீக்கப் பயன்படுத்தும் ஒரு வகைக் கெமிக்கல் ஆகும்.
எத்திலீன் ஆக்சைட் கொண்ட உணவு பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட்டாலோ, நுகர்ந்தாலோ லிம்போமா மற்றும் லுகேமியா போன்ற புற்றுநோய்கள் வருவதற்கான அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில், உணவுப் பாதுகாப்பைக் கண்காணிக்கும் "ரேபிட் அலர்ட் சிஸ்டம் ஃபார் ஃபுட் அண்ட் ஃபீட்" (Rapid Alert System for Food and Feed - RASFF) என்ற தளத்தில் கிடைத்த தகவல்களின்படி, 525 உணவுப் பொருட்கள் மற்றும் 2 தீவனப்பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் கண்டறியப்பட்டது.
இதில், 332 பொருட்களின் தாயகம் (sole origin) இந்தியா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு கண்டறியப்பட்ட பிற நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இந்திய உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடைக்குக் காரணமாக இருந்த இதே எத்திலீன் ஆக்சைடு தான், ஐரோப்பிய ஒன்றியத்தில் இது தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு எவ்விதமான நடவடிக்கையும் இந்திய அரசு சார்பில் எடுக்காதது கவலைக்குறியது.
More From GoodReturns

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications