டெல்லி: இந்தியாவில் நடக்க இருக்கும் கிலாஸ்கோவ் 2014 காமன்வெல்த் கேம்ஸிற்கும், ஏசியன் கேம்ஸிற்கு ஸ்பான்சர் செய்ய அமுல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் இந்தியவின் மிகப்பெரிய பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம், மேலும் இந்நிறுவனம் இந்தியாவின் மிகப் பழமையான நிறுவனம் என்பது குறிப்பிடதக்கது.
ஸ்பான்சர் செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்திய ஒலிம்பிக் அசோசியேஷன் அமைப்புடன் அமுல் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
அமுல், டேஸ்ட் ஆஃப் இந்தியா
அமுல் நிறுவனத்தின் தலைவர் கூறுகையில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் நிறுவனத்தின் பால் பொருட்களின் அருமை மற்றும் நன்மைகளை விளையாட்டின் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
லண்டன் ஒலிம்பிக்ஸ்
அமுல் நிறுவனத்தின் "ஈட் மில்க் வித் எவ்ரி மீல்" என்ற தலைப்பில் இந்தியா சார்பில் 2012ஆம் ஆண்டு கோலாகலமாக நடந்த லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஸ்பான்சர் செய்தது.
புட்பால், பார்மூலா ஒன்
ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் போட்டி என்று மட்டும் அல்லாமல் அமுல் நிறுவனம் புட்பால், கிரிக்கெட் மற்றும் பார்மூலா ஒன் ஆகிய விளையாட்டுகளிலும் ஸ்பான்சர் செய்து வருகிறது.
கிரிக்கெட் மட்டும் விளையாட்டு அல்ல
இந்தியாவில் கிரிக்கெட்டின் மோகம் தலைவிரித்து அடுகிற இந்த வேலையில் காமன்வெல்த், ஏசியன் கேம்ஸ் இந்தியாவில் நடப்பதன் முலம் இந்தியாவில் மற்ற விளையாட்டுக்கான ஆர்வம் அதிகரிக்கும்.