டெல்லி: உலகம் முழுவதும் இன்று இணையதளத்துடன் ஒன்றிணைத்து இயங்க துவங்கியுள்ளக நிலையில், இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 35.4 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தத் தகவலை இந்திய இண்டர்நெட் மற்றும் மொபைல் சங்கம் (IAMAI) தெரிவித்துள்ளது.
35.4 கோடி இண்டர்நெட் பயன்படுத்துவோர்களில் 60 சதவீதம் நபர்கள் (21.3 கோடி) மொபைல் மூலம் பயன்படுத்துவதாக ஐஏஎம்ஏஐ தெரிவித்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தான்.
மேலும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யப் பல நிறுவனங்கள் குவித்துள்ளதால், அடுத்த 2 வருடங்களில் ஸ்மார்ட்போன் விலை அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது. இக்காலகட்டத்தில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் உயரும்.
கடந்த வருடம் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது இணையதளத்தைப் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை 26 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.