மும்பை: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடன் பத்திரங்களின் விற்பனையின் மூலம் சுமார் 300 மில்லியன் டாலர் ஆதாவது 1800 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டிஎம்எல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள பத்திரங்களை 5.75 சதவீதம் வட்டியுடன் விற்பனை செய்வதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வியாழனன்று மும்பை பங்கு சந்தையில் அறிக்கை தாக்கல் செய்தது.
இப்பத்திரங்களை விற்க ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வங்கிகள், பாங்க் ஆஃப் அமெரிக்கா, மெர்ரில் லிஞ்ச், சிட்டிகுரூப் வங்கி மற்றும் எச்எஸ்பிசி வங்கி ஆகியவை ஒன்றினைந்து விற்பனையை துவங்கியுள்ளது.
இப்பத்திர விற்பனைக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்நிறுவனத்தின் பத்திர விற்பனைக்கு 2 பில்லியன் டாலர் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதார டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கருவூலம் மற்றும் முதலீட்டாளர் உறவுத் துறையின் தலைவர் விஜய் பி சவுமியா தெரிவித்தார்.
இப்பங்கு விற்பனை அறிவித்த பிறகு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 5.25 புள்ளிகள் உயர்ந்து 422.15 ரூபாயிக்கு விற்கப்படுகிறது.