
ஃபேஸ்புக்கில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஏராளமானோர் உள்ளனர். அப்படி இருக்கையில் ஃபேஸ்புக்கில் நீங்கள் என்ன செய்தால் உங்கள் அகௌண்டை யாராவது ஹேக் செய்தாலும் அதனால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் என்பதை பார்ப்போம்.
ஒரு வேளை உங்கள் அகௌண்ட் ஹேக் செய்யப்பட்டால் முதலில் உங்கள் பெயரை மாற்றுங்கள். உங்கள் பட்டபெயரைக் கூட பயன்படுத்துங்கள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட அகௌண்ட் வைத்துக்கொள்ளுங்கள். இது ஃபேஸ்புக்கின் விதிமுறைகளுக்கு எதிரானது தான். ஆனால் 80 மில்லியன் பேர்கள் ஏற்கனவே ஒன்றுக்கும் மேற்பட்ட அகௌண்ட் வைத்துள்ளனர்.
இரண்டாவதாக போட்டோக்களை ஜியோடேக்(geotag) செய்யாதீர்கள். ஜியோடேக் செய்தால் அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்துவிடலாம்.
மூன்றாவதாக உங்களின் உண்மையான வயதை குறிப்பிட வேண்டாம்.
நான்காவதும் முக்கியமானதுமாக ஃபேஸ்புக்கில் கிரெடிட் கார்டு விவரங்களை குறிப்பிட்டு வைக்க வேண்டாம்.
ஐந்தாவதாக புதுக் கார் வாங்கி அத்துடன் போட்டோ எடுத்து அதை ஃபேஸ்புக்கில் போடாதீர்கள். கார் சாவியை எங்கு வைப்பீர்கள் என்பதையும் தெரிவித்துவிட வேண்டாம்.
உங்கள் டைம்லைனுக்கு சென்று அங்குள்ள பர்சனல் விவரங்களை நீக்கிவிடுங்கள்.
இறுதியாக உங்கள் அகௌண்டை டீஆக்டிவேட் செய்யவும்.
ஃபேஸ்புக் பாஸ்வேர்டை வேறு எதற்கும் பயன்படுத்த வேண்டாம்.


Click it and Unblock the Notifications