வைப்புத் தொகைக்கு அதிக வட்டி கொடுக்கும் 7 வங்கிகள்

சென்னை: 2103-2014ம் ஆண்டுக்கான வரியைச் செலுத்த மற்றும் வரி செலுத்துவதில் விடுபட்டு, வரியை சேமிக்க இன்னும் 9 நாட்களே உள்ளன. இந்த நிலையில் வரியை சேமிக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

இதற்கு வருமான வரி சட்டத்தின் 80சி பிரிவு வழி வகுக்கிறது. வரியை சேமிக்க விரும்பினால் வங்கிகள் வழங்கும் வருமான வரி சேமிப்பு வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்யலாம். அவ்வாறு முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வொரு வங்கியும் பல்வேறு வகையான வட்டி விகிதத்தை வழங்குகின்றன.

இவ்வாறு வருமான வரி சேமிப்பு வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு எந்தெந்த வங்கிகள் எல்லாம் அதிக வட்டியை வழங்குகின்றன என்று பார்ப்போம்.

பாரத் கோஆப்பரேட்டிவ் வங்கி

பாரத் கோஆப்பரேட்டிவ் வங்கி

இந்த வங்கி தனது பாரத் டெபாசிட் டாக்ஸ் பெனிபிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 10 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்தால் வரி செலுத்துவதில் இருந்து விடுபட்டு வரியை சேமிக்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் வரி விலக்கு பெற வருமான வரி சட்டம் பிரிவு 80சி அனுமதி அளித்திருக்கிறது.

அப்யுதயா கோஆப்பரேட்டிவ் வங்கி

அப்யுதயா கோஆப்பரேட்டிவ் வங்கி

இந்த வங்கி வழங்கும் வரி சேமிக்கும் திட்டத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதலீடு தொகைக்கு 9.75 சதவீத வட்டியை வழங்குகிறது. முதியவர்களுக்கும் இதே வட்டியை வழங்குகிறது.

சிட்டி யூனியன் வங்கி

சிட்டி யூனியன் வங்கி

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிட்டி யூனியன் வங்கி, வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்தில் இணைபவர்களுக்கு 9.50 சதவீத வட்டியை வழங்குகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு நமது சேமிப்பை இந்த திட்டத்தின் கீழ் அதிக வட்டியுடன் பாதுகாத்து வைக்க முடியும்.

டெவலப்மென்ட் கிரடிட் வங்கி

டெவலப்மென்ட் கிரடிட் வங்கி

மும்பையைச் சேர்ந்த இந்த வங்கி வரியைச் சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்தில் இணைபவர்களுக்கு 9.30 சதவீத வட்டியை வழங்குகிறது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட்

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட்

இந்த வங்கி 9.25 சதவீத வட்டியை வழங்குகிறது. வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு, அவர்களின் தேவைக்கேற்ப மாத வட்டி, காலாண்டு வட்டி, அரையாண்டு வட்டி, ஆண்டு வட்டி என்று பல்வேறு வகையில் வட்டியை வழங்குகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர்

ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர்

இந்த வங்கி வழங்கும் டாக்ஸ் சேவர் டெப்பாசிட் திட்டத்தில் இணைபவர்களுக்கு 9.10 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இந்த வங்கி மட்டுமே வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்திற்கு அதிக வட்டியை வழங்குகிறது.

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி

இந்த வங்கியும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியாகும். வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்தில் இணைபவர்களுக்கு இந்த வங்கி 9.05 வட்டியை வழங்குகிறது.

மேற்கூறிய வங்கிகளின் வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்தால் பணமும் பத்திரமாக இருக்கும்,வட்டியும் அதிகமாகக் கிடைக்கும். அதே நேரத்தில் வரி செலுத்துவதிலிருந்து விடுபடவும் முடியும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+