சென்னை: 2103-2014ம் ஆண்டுக்கான வரியைச் செலுத்த மற்றும் வரி செலுத்துவதில் விடுபட்டு, வரியை சேமிக்க இன்னும் 9 நாட்களே உள்ளன. இந்த நிலையில் வரியை சேமிக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர்.
இதற்கு வருமான வரி சட்டத்தின் 80சி பிரிவு வழி வகுக்கிறது. வரியை சேமிக்க விரும்பினால் வங்கிகள் வழங்கும் வருமான வரி சேமிப்பு வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்யலாம். அவ்வாறு முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வொரு வங்கியும் பல்வேறு வகையான வட்டி விகிதத்தை வழங்குகின்றன.
இவ்வாறு வருமான வரி சேமிப்பு வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு எந்தெந்த வங்கிகள் எல்லாம் அதிக வட்டியை வழங்குகின்றன என்று பார்ப்போம்.
பாரத் கோஆப்பரேட்டிவ் வங்கி
இந்த வங்கி தனது பாரத் டெபாசிட் டாக்ஸ் பெனிபிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 10 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்தால் வரி செலுத்துவதில் இருந்து விடுபட்டு வரியை சேமிக்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் வரி விலக்கு பெற வருமான வரி சட்டம் பிரிவு 80சி அனுமதி அளித்திருக்கிறது.
அப்யுதயா கோஆப்பரேட்டிவ் வங்கி
இந்த வங்கி வழங்கும் வரி சேமிக்கும் திட்டத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதலீடு தொகைக்கு 9.75 சதவீத வட்டியை வழங்குகிறது. முதியவர்களுக்கும் இதே வட்டியை வழங்குகிறது.
சிட்டி யூனியன் வங்கி
தமிழ்நாட்டைச் சேர்ந்த சிட்டி யூனியன் வங்கி, வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்தில் இணைபவர்களுக்கு 9.50 சதவீத வட்டியை வழங்குகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு நமது சேமிப்பை இந்த திட்டத்தின் கீழ் அதிக வட்டியுடன் பாதுகாத்து வைக்க முடியும்.
டெவலப்மென்ட் கிரடிட் வங்கி
மும்பையைச் சேர்ந்த இந்த வங்கி வரியைச் சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்தில் இணைபவர்களுக்கு 9.30 சதவீத வட்டியை வழங்குகிறது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட்
இந்த வங்கி 9.25 சதவீத வட்டியை வழங்குகிறது. வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு, அவர்களின் தேவைக்கேற்ப மாத வட்டி, காலாண்டு வட்டி, அரையாண்டு வட்டி, ஆண்டு வட்டி என்று பல்வேறு வகையில் வட்டியை வழங்குகிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர்
இந்த வங்கி வழங்கும் டாக்ஸ் சேவர் டெப்பாசிட் திட்டத்தில் இணைபவர்களுக்கு 9.10 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இந்த வங்கி மட்டுமே வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்திற்கு அதிக வட்டியை வழங்குகிறது.
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி
இந்த வங்கியும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியாகும். வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்தில் இணைபவர்களுக்கு இந்த வங்கி 9.05 வட்டியை வழங்குகிறது.
மேற்கூறிய வங்கிகளின் வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்தால் பணமும் பத்திரமாக இருக்கும்,வட்டியும் அதிகமாகக் கிடைக்கும். அதே நேரத்தில் வரி செலுத்துவதிலிருந்து விடுபடவும் முடியும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications