வரையறுக்கப்பட்டிருக்கும் லாபம்:
தற்போது பல நாடுகளில் லாபத்திலிருந்து வழங்கும் போனஸ் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதற்காக தொழிலாளர் நலன்களைக் காக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களும் உள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டு உழைக்கும் வர்க்கத்தின் நலனைக் காக்க 13வது மாத சம்பளம் அல்லது கிறிஸ்துமஸ் போனஸ் என்று அழைக்கப்படும் பிரசிடென்ஷியல் டிக்ரீ எண். 851 என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டது. இதே போன்று இந்தியாவில் இருக்கும் 1965 பேமன்ட் ஆப் போனஸ் ஆக்ட் என்ற சட்டம் தொழிலாளர்களின் போனசை உறுதி செய்கிறது.
போனஸ் மதிப்பீடு:
பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் போனசை மதிப்பிடுவதெற்கென வழிமுறைகள் உள்ளன. குறிப்பாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஓராண்டு பணியை நிறைவு செய்தால் அவர் ஒரு மாதத்திற்கான சம்பளத்தைப் போனசாகப் பெற தகுதி பெறுகிறார். ஒரு வேளை ஒரு வருடம் பூர்த்தியாகவில்லை என்றால் அவர் வேலை செய்த மாதங்களைக் கணக்கில் கொண்டு போனஸ் வழங்கப்படும்.
அதே நேரத்தில் இந்தியாவில் மாதத்திற்கு ரூ.10,000க்கும் அதிகமாக சம்பளத்தைப் பெறும் ஒருவர், ஒரு வர்த்தக ஆண்டில்(அகௌண்ட்டிங் இயர்) 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் வேலை செய்திருந்தால் அவர் தனது சம்பளத்திலிருந்து 8.33 சதவீத போனசைப் பெற தகுதி பெறுகிறார்.
பலன் தரும் செலவு:
தொழிலாளிகள் தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு தகுந்தாற்போல மற்றும் தேவைக்கேற்ப சம்பளத்தைத் தவிர்த்து அவர்களுக்கு ஒரு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதை ஒவ்வொரு தொழிலாளியும் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் தங்கள் போனசை பயனுள்ள முறையில் செலவழிக்க வேண்டும். அதாவது ஒருவர் தான் வாங்கும் போனசை ஒரே நேரத்தில் செலவழிப்பவராக இருந்தால் பணம் இல்லாத நாட்களில் அவர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார். எனவே அவர் பின்வரும் வழிகளைப் பின்பற்றினால் அது பயனுள்ளதாக இருக்கும்.
போனஸ் பணத்தில் தனது அனைத்து தேவைகளையும் நிறைவு செய்ய வேண்டும் என்று அவர் கனவு காணக் கூடாது. அதாவது சம்பளத்தை சரியாகத் திட்டமிட்டு சம்பளத்திற்குள் வாழ்க்கையைத் திட்டமிட வேண்டும்.
எனவே ஒருவர் தனது போனஸ் பணத்தில் 50 சதவீதத்தை அவசர காலத்திற்கு பயன்படும் சேமிப்பில் முதலீடு செய்யலாம்.
20 சதவீத போனசை குடும்ப செலவுகளுக்கும் மற்றும் பொழுதுபோக்கிற்கும் பயன்படுத்தலாம்.
வீடு மற்றும் வீட்டுப் பொருட்களைப் பழுது பார்ப்பதற்கு 20 சதவீத போனசைப் பயன்படுத்தலாம்.
10 சதவீத போனசை அன்பளிப்புகள் வழங்கவும், இல்லாதவர்களுக்கு உதவி செய்வதற்காவும் பயன்படுத்தலாம். அப்போது வாழ்க்கை அர்த்தமுள்ள முறையில் இருக்கும்.
இவ்வாறு அர்த்தமுள்ள முறையில் போனஸ் பணத்தை செலவு செய்யும் போது, அதை வைத்து ஏதோ ஒன்றை சாதித்தது போன்ற ஒரு எண்ணம் மனதில் தோன்றும். மேலும் ஒரே நேரத்தில் போனஸ் பணம் முழுவதையும் செலவழிப்பதையும் தடுக்க முடியும். மேலும் முறையாக போனஸ் பணத்தைப் பயன்படுத்தும் போது அவசர காலங்களில் அது உதவியாக இருக்கும்.