சென்னை: அமெரிக்கா போன்ற நாடுகளில் வாரிசுரிமை வரி என்று ஒன்று உள்ளது. வாரிசுரிமை வரி வகிதம் 10 முதல் 50 வரை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. இந்த வாரிசுரிமை வரியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தலாமா என்று மத்திய அரசு தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறது.
அதாவது பெற்றோர் அல்லது உறவினர் ஆகியோரின் காலத்திற்கு பின்பு அவர்களிடமிருந்து சொத்துக்களைப் பெற்ற வாரிசுதாரர், அந்த சொத்துக்களுக்கு வரி செலுத்த வேண்டும். இதைத் தான் வாரிசுரிமை வரி என்கிறோம். இந்த வரியை இந்தியாவில் அறிமுகம் செய்வதன் மூலம் அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பைக் குறைக்க முடியும் என்று அரசு கருதுகிறது. கடந்த 1953ம் ஆண்டு எஸ்டேட் டியூட்டி ஆக்ட் என்ற சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு பின் 1985ல் அந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டது. அதன் மூலம் மூதாதையரின் சொத்துக்களைப் பெற்ற வாரிசுதாரர் சொத்துக்களுக்கான வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலை உருவானது. ஆனால் தற்போது இந்த வாரிசுரிமை வரியை மீண்டும் அறிமுகம் செய்யலாமா என்று அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.
வாரிசுரிமை வரியை எவ்வாறு கணக்கிடுவது?
இறந்தவரின் மொத்த சொத்தையும், அதாவது அவர் விட்டுச் சென்ற மொத்த ரொக்க பணம் மற்றும் அவர் செய்திருக்கும் மொத்த முதலீடுகள் ஆகியவற்றைக் கூட்டி, அதிலிருந்து அவருடைய கடன்களை கழித்து அதில் மீதமிருக்கும் சொத்துக்களை அரசு மதிப்பீடு செய்யும். அந்த சொத்தின் மதிப்பு, அரசு நிர்ணயித்திருக்கும் மதிப்பிற்கு அதிகமாக இருந்தால் அந்த சொத்தைப் பெறும் வாரிசுதாரர், அந்த சொத்துக்கு அரசு நிர்ணயிக்கும் வரியை செலுத்த வேண்டும். இதன் மூலம் செல்வந்தர்கள் வைத்திருக்கும் அதிகப்படியான சொத்தின் மிகச் சிறிய பகுதி அரசுக்கு கிடைக்கும். அதனால் அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பு குறையும்.
எனினும் இது பணக்காரர்களுக்கு கூடுதல் வரிச் சுமையாக அமையும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வருமானத்திற்கும், சொத்துக்களுக்கும் வரி செலுத்த வேண்டி இருக்கும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications