இந்த திட்டம் மருந்துவ செலவை குறைப்பதோடு மன உளைச்சலையும் குறைக்கிறது. இந்த திட்டத்தில் பெற்றோரை சேர்ப்பது பிள்ளைகளின் கடமை என்று கூடச் செல்லலாம் தப்பில்லை. இந்த திட்டங்களை வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களை இங்கு பார்ப்போம்.
வயது வரம்பு:
60 வயதிற்கு மேற்ப்பட்டவர்களை காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பது கொஞ்சம் கடினம் தான். ஆனால் திட்டம் இல்லை என்று பொருள் இல்லை. இவர்களுக்கு கொஞ்சம் சந்தா அதிகமாக இருக்கும் அவ்வளவு தான். காப்பீட்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திட்டத்தை வைத்திருக்கும். இதனை நன்கு படித்து தேவையான திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு செய்யும் போது திட்டத்தின் புதுப்பித்தல் நிபந்தனைகளையும் பார்க்கவும். இன்றே திட்டம் எடுக்க கடினமென்றால், சில ஆண்டுகளுக்குப் பின் வயது திரும்பாது, திட்டம் இன்னும் கடினமாகும். எனவே, புதுப்பித்தல் இருக்கும் திட்டத்தை எடுக்க வேண்டும்.
விரிவான பாதுகாப்பு:
சில வருடங்களுக்கு முன்பு வரை நோய்கள் ஏற்கனவே இருந்தால் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முதியோர்களை சேர்க்க மாட்டார்கள். ஆனால் இன்று அரசின் ஆணைப்படி ரத்த அழுத்தம், சக்கரை போன்ற நோய்கள் உள்ளவர்களை நிறுவனங்கள் தங்களுடைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கின்றன. ஆனால் இதற்கு சந்தா கொஞ்சம் அதிகம். காப்பீட்டு திட்டம் வாங்கும் போதே பார்த்து வாங்குவது நல்லது. பின்னர் வரும் அலைச்சல் குறையும்.
பணம் செலுத்த தேவையில்லாத திட்டம்:
உங்கள் பெற்றோருக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் எடுக்கையிலேயே மருத்துவமனைகளில் பணம் செலுத்தத் தேவையில்லாத திட்டத்தை எடுக்கவும். காப்பீட்டு நிறுவனம் இந்த தொகையை கட்டிவிடும். இதனால் பெற்றோர் மருத்துவமனையில் சேரும் போதோ, டிஸ்சார்ஜ் ஆகும் போதோ பணம் கட்டத் தேவையில்லை.
பெரியவர்களுக்கு திட்டம் வாங்கும் முன் மருத்துவப் பரிசோதனைச் செய்வது அவசியம். இந்தப் பரிசோதனை அவர்களுக்கு இருக்கும் நோய்களுக்கு ஏற்றவாறு காப்பீட்டு திட்டத்தை வாங்க உதவும்.
நம்மைப் பாராட்டி சீராட்டி வளர்த்த பெற்றோருக்கு நாம் செய்யும் கடமைகளில் ஒன்று அவர்களை வயதான காலத்தில் பார்த்துக் கொள்வது. அந்த வகையில் காப்பீடு வாங்குவதும் சேரும். நல்ல திட்டத்தை ஏஜெண்ட்களிடம் விசாரித்து இன்டர்நெட்டில் ஒப்பிட்டு வாங்கவும்.
நல்ல பிள்ளையாகத் தாய் தந்தைக்கு நல்ல ஒரு காப்பீட்டு திட்டத்தை எடுத்துக் கொடுங்கள்... அவர்களின் சுமையை கொஞ்சம் குறையுங்கள்!