சென்னை: ஒரு காலத்தில் அரசர்கள் தங்களைப் புகழ்ந்து பாடும் புலவர்களுக்கு வெகுமதியாக தங்க நாணயங்களைப் பரிசளிப்பர். அந்த தங்க நாணயங்களுக்கு ஒரு பெரிய மரியாதை உண்டு.
அதுபோல் இப்போதும் தங்க நாணயங்களுக்கு மிகப் பெரிய மதிப்பும், மரியாதையும் உண்டு. எனவே பலர் தங்க நாணயங்களை வாங்க ஆசைப்படுகின்றனர். இந்தியாவில் தங்க நாணயங்களை வாங்குவது எளிது. ஆனால் அவற்றைத் திருட்டிலிருந்து பாதுகாக்க ஒரு சிறந்த பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தங்க நாணயங்களைப் பத்திரமாக வைத்திருக்க கோல்டு இடிஎப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
நீங்கள் நகைக் கடையிலோ அல்லது வங்கியிலோ எங்கிருந்து தங்க நாணயங்களை வாங்கினாலும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
பான் கார்டு வைத்திருக்கிறீர்களா?
ஒரு வேளை நீங்கள் ரூ.50,000க்கு அதிகமாக தங்க நாணயங்களை வாங்க விரும்பினால் உங்களுடன் பான் கார்டை வைத்திருப்பது நல்லது. ஏனெனில் நீங்கள் பான் கார்டு வைத்திராவிட்டால் வங்கியோ அல்லது நகைக் கடையோ உங்களுக்கு ரூ.50,000க்கு அதிகமாக தங்க நாணயங்களை விற்கமாட்டார்கள்
நகைக் கடைகள் சிறந்தது
வங்கிகளும் தங்க நாணயங்களை விற்பனை செய்கின்றன. ஆனால் நகைக் கடைகளில் தங்க நாணயங்களை வாங்குவது சிறந்ததாக இருக்கும். ஏனெனில் வாங்கிய தங்க நாணயங்களை நீங்கள் விற்க வேண்டும் என்றால் அவற்றை அந்த நகைக் கடையே வாங்கிக் கொள்ளும். ஆனால் நகைக் கடைகளில் தங்க நாணயங்கள் வாங்கும் போது அதன் தூய்மையை பரிசோதித்து வாங்குவது நல்லது.
வங்கிகள் மிக எளிதாக அந்த தங்க நாணயங்களை வாங்க மாட்டார்கள். அந்த தங்க நாணயங்களுக்கு உத்திரவாதம் இருந்தாலும் அதன் தூய்மையை பரிசோதிப்பார்கள்.
தங்க நாணய அளவுகள்
பொதுவாக தங்க நாணயங்கள் 5, 10, 20 மற்றும் 50 கிராம் அளவுகளில் வருகின்றன. உங்களுக்கு பிடித்த அளவை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் அவ்வாறு தங்க நாணயங்களை வாங்கும் போது எலக்ட்ரானிக் படிவம் மூலம் வங்கினால் அது பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அவ்வாறு வாங்கும் போது அந்த தங்க நாணயங்களை விற்பது மிக எளிதாக இருக்கும்.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications