அவ்வாறு இந்த சான்றிதழை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால், அஞ்சல் அலுவலகரிடமோ அல்லது அஞ்சலக தலைமை அலுவலரிடமோ அதற்கான விண்ணப்பத்தை வழங்க வேண்டும். பொதுவாக இந்த சான்றிதழ் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். ஒரு வருடம் முடிந்து இந்த சான்றிதழ் காலாவதியான பின்னர் இதை வேறொருவருக்கு மாற்றித் தரலாம்.
பின் வரும் காரணிகள் சரியாக இருக்கும் பட்சத்தில்தான் இந்த சான்றிதழை வேறொருவருக்கு மாற்றித் தர முடியும்.
1. இந்த என்எஸ்சி சான்றிதழை வாங்குபவர் அதற்குத் தகுதியானவராக இருக்க வேண்டும்.
2. மேலும் இந்த சான்றிதழைக் காலாவதியான பின்னர் தான் வேறொருவருக்கு மாற்றித்தர முடியும்.
ஒருவேளை காலாவதியாகும் முன் மாற்றித் தர வேண்டும் என்றால், இந்த பாத்திரம் யாருக்கு மாற்றித் தரப்படுகிறதோ அந்த நபர் இந்த பத்திரத்தை வைத்திருப்பவருக்கு நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும்.
இரண்டாவதாக அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையில் தான் காலாவதியாகுவதற்கு முன்னர் மாற்றித் தர முடியும்.
மூன்றாவதாக இந்த பத்திரத்தில் இருக்கும் முழுத் தொகையையும் மாற்றித் தர வேண்டும். இதில் இருக்கும் ஒரு பகுதித் தொகையை மட்டும் மாற்றித் தர முடியாது.
ஒரு வேளை வயது குறைந்த மைனர்களுக்கு இந்த பத்திரத்தை மாற்றித் தர வேண்டும் என்றால், அந்த மைனர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர்கள், சம்பந்தப்பட்ட மைனர்கள் உயிருடன் இருக்கின்றனர் மற்றும் அவர்களின் நலனுக்காகவே இந்த பத்திரம் மாற்றப்படுகிறது என்று சான்று தர வேண்டும்.
மேலும் இந்த பத்திரத்தை வைத்திருந்தவருக்கே மீண்டும் மாற்றித் தரப்படலாம். ஆனால் அதற்கு தபால் அலுவலரின் அனுமதி வேண்டும்.
வரி விலக்கு:
இந்த என்எஸ்சி பத்திரத்தை வைத்திருந்தால் வரி விலக்கு உண்டு. இந்த பத்திரத் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி உண்டு ஆனால் டிடிஎஸ்(TDS) கிடையாது.