அலுவலகத்தில் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் உங்கள் குடும்பத்துக்கு போதுமா?

அலுவலகத்தில் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் மட்டும் போதுமா என்ன?
சென்னை: பெரிய பெரிய நிறுவனங்களில் பணி புரியும் பலர் தங்களையும், தங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்கான தனியான ஒரு ஹெல்த் பிளானைப் பற்றி கவலைப்படுவதில்லை.

அவர்களின் சம்பளத்திலேயே இலவச ஹெல்த் கவர் வழங்கப்படுவதால் வேறொரு தனி ஹெல்த் பிளானைப் பற்றி அவர்கள் கண்டு கொள்வதில்லை.

மேலும் அவ்வாறு தனி ஹெல்த் பிளானில் சேருவது என்பது பண விரயம் என்றும் எண்ணுகின்றனர். வேலை செய்யும் நிறுவனமே இலவச ஹெல்த் கவர் பிளானை வழங்குவதால், ஏன் ஒரு புதிய ஹெல்த் பிளானை வாங்க வேண்டும் என்றும் அவர்கள் நினைக்கின்றனர்.

உண்மையில் அவர்களின் நிறுவனங்கள் வழங்கும் இலவச ஹெல்த் பிளான் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கிறது. ஆனால் அந்த இலவச ஹெல்த் பிளான் அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவர்களின் நிறுவனங்கள் வழங்கும் இலவச ஹெல்த் பிளான் ரூ.2 முதல் 5 லட்சம் வரை மட்டுமே கவர் செய்யும்.

ஆனால் இந்த தொகை குடும்பத்தின் மருத்துவச் செலவுக்கு போதுமானதாக இருக்காது. எடுத்துக்காட்டாக புற்று நோய் போன்ற கொடிய நோய்களுக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் குறைந்தது ரூ.10 லட்சம் தேவைப்படும். ஆனால் நிறுவனம் வழங்கும் இலவச ஹெல்த் பிளான் மூலம் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மட்டுமே கிடைக்கும்.

இந்த நிலையில் மீதமுள்ள ரூ.5 லட்சத்திற்கு என்ன செய்வது? இந்த தொகையை யார் தருவார்? குறைந்த அளவில் மாத சம்பளம் வாங்கும் ஒருவர் இந்த தொகையை செலுத்த முடியுமா? மேலும் நிறுவனத்தில் வாழ்நாள் முழுவதும் பணி செய்தால்தான் நிறுவனம் வழங்கும் இலவச ஹெல்த் பிளான் செல்லுபடியாகும்.

தற்போதைய சூழலில் ஏராளமான பணி நீக்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மேலும் பலர் நீண்ட காலத்திற்கு ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதில்லை. ஆகவே குடும்பத்தின் ஆரோக்கியத்தை யார் பாதுகாப்பது? வேலை பார்க்கும் நிறுவனம் அதற்கு முழுமையான உத்திரவாதத்தை வழங்காது.

அடுத்ததாக பணியிலிருந்து ஓய்வு பெறும் போது இந்த இலவச ஹெல்த் பிளான் தானாகவே காலாவதியாகிவிடும். ஓய்வுக்கு பின்னர் பென்ஷன் பெறலாம். ஆனால் மருத்துவ செலவுகளை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஓய்வு பெற்ற பின்னர் ஒரு புதிய ஹெல்த் பிளானை வாங்குவது என்பது சாத்தியமாகாத காரியமாகும். அவ்வாறு ஓய்வு பெற்ற பின் ஒரு புதிய ஹெல்த் பிளானை வாங்கினாலும், அந்த வயதில் அவர்களுக்கு ஏற்படும் அதிகமான நோய்களை ஹெல்த் பிளான் கவர் செய்ய வேண்டும் என்றால், அவர்கள் அதிகமான பிரீமியம் தொகையைச் செலுத்த வேண்டும். ஓய்வுக்கு பின்னர், பென்ஷன் தொகையில் அதிக பிரீமியம் தொகையைச் செலுத்துவது என்பது முடியாத காரியம் ஆகும்.

எனவே வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கும் ஹெல்த் பிளான் கவர்ச்சிகரமானதாக தெரிந்தாலும், குடும்ப ஆரோக்கியத்திற்காக தனியான ஹெல்த் பிளானை வாங்குவது புத்திசாலித்தனமாக இருக்கும். மேலும் இந்த ஹெல்த் பிளானை புதுப்பித்துக் கொண்டே வந்தால் ஓய்வு பெற்ற பின்னரும் இந்த பிளான் தொடர்ந்து வரும். எனவே நிறுவனம் வழங்கும் இலவச ஹெல்த் பிளானைத் தவிர்த்து ஒரு புதிய ஹெல்த் பிளானில் சேருவது சாலச் சிறந்ததாக இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+