(SBI Gold deposit scheme: 6 reasons to invest )
இந்த திட்டத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. குறிப்பாக இந்த திட்டத்தில் குறிக்கப்பட்டிருக்கும் காலமான அதாவது பாலிசி காலம் முதிர்வு பெறும் போது அல்லது பாலிசி காலம் முடிவதற்கு முன்பே பாலிசிதாரர் இறந்துவிட்டால் இந்த திட்டத்தில் சேமித்த பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அதோடு இந்த திட்டம் ஒருசில உடனடி அவசரகால செலவுகளுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை அதாவது பேசிக் சம் அஸ்யூர்ட் தொகையை பாலிசி காலத்திலேயே வழங்குகிறது.
உறுதியான நன்மை
முதிர்ச்சி காலத்திற்கு முன்பே பாலிசி காலத்தின் இறுதி 3 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 20 சதவீத பேசிக் அஸ்யூர்ட் தொகையை இந்த திட்டம் வழங்குகிறது.
பாலிசி முதிர்வு பெறும் போது, ரிவர்சனரி போனஸ் மற்றும் டர்மினல் போனசோடு சேர்த்து 40 சதவீத பேசிக் அஸ்யூர்ட் தொகையும் வழங்கப்படும்.
எடுத்துக்காட்டாக, ஒரு பாலிசியின் காலம் 20 ஆண்டுகள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானல் பாலிசியின் காலத்தில் வரும் 17, 18 மற்றும் 19 ஆகிய ஆண்டுகளின் தொடக்கத்தில் 20 சதவீத அஸ்யூர்ட் தொகை வழங்கப்படும். அதோடு பாலிசி காலம் முதிர்வு அடையும்போது அதாவது 20வது ஆண்டின் முடிவில், ரிவர்சனரி போனஸ் மற்றும் டெர்மினல் போனஸ் ஆகியவற்றோடு சேர்த்து 40 சதவீத சம் அஸ்யூர்ட் தொகையும் வழங்கப்படும்.
இறப்பின் போது பெறும் நன்மை
பாலிசிதாரர் இறந்துவிட்டால், உடனடியாக பேசிக் அஸ்யூர்ட் தொகைக்கு சமமான தொகை வழங்கப்படும்.