போர்ட்ஃபோலியோவை ஆராயவும்:
திட்டத்திற்கான போர்ட்ஃபோலியோவில் பங்குகள் ஏதேனும் சமீபமாக வரக்கூடிய தவணையில் பயனற்றதாகவோ அல்லது நன்றாக செயல்பட முடியாத நிலையிலோ உள்ளதா என்பதை விரைவாக ஆராயுங்கள். உதாரணமாக, அத்திட்டம் இன்ஃப்ரா மற்றும் உலோகப் பங்குகளில் அதிகமாக முடங்கி இருந்தால் குறுகிய காலத்தில் நீங்கள் அதிலிருந்து லாபம் சம்பாதிக்க முடியாது. ஏனெனில் இத்தொழில்கள் தற்போது முதலீட்டாளர்களின் விருப்பத்துக்கு உகந்தவையாக இல்லை.
நியாயமான லாபத்தை பெற்றிருப்பின் திட்டத்தை மாற்றலாம்:
உங்கள் திட்டம் தொடர்ந்து நல்ல லாபத்தை கொடுத்திருந்தால் கூடிய விரைவில் அது சராசரிகளின் விதிக்குட்படும் சாத்தியம் நிறைய உள்ளது. அதனால் நல்ல மதிப்பீடுடன் இருக்கும் வேறு ஒரு புது திட்டத்திற்கு மாறலாம்.
சந்தைகள் எழுச்சியடைந்தால், பங்குகளை விற்று லாபம் ஈட்டுவது சிறந்தது:
சந்தைகள் எழுச்சியடையும்போது திட்டங்களிலிருந்து வெளியேறி உங்கள் போர்ட்ஃபோலியோவிலிருந்து ஒரு பகுதியை மட்டுமாவது விற்று பணம் ஈட்டுவது சிறந்தது. மிச்சமுள்ள 50 சதவீதப் பங்குகளை அத்திட்டத்திலேயே தொடரலாம்.
வட்டி விகிதங்கள் சரியும் போது, கடன் திட்டங்களிலேயே தொடரலாம்:
வட்டி விகிதங்கள் சரியக்கூடும் என்று நீங்கள் எண்ணினால் நீண்ட கால கடன் திட்டங்களிலேயே தொடரலாம். உதாரணமாக ஆர்பிஐ, தன் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வருடம், குறைந்த பட்சம் 75 அடிப்படைப் புள்ளிகள் அளவுக்கு ஆர்பிஐ-யின் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம்.
இந்நிலையில் கடன் திட்டங்களிலேயே தொடர்வது நலம். ஏனெனில், இம்மாதிரியான சரியும் வட்டி விகித சூழலில் கடன் திட்டங்களில் தான் நல்ல லாபம் கிடைக்கும்.
எந்நிலையிலும், முதலீட்டாள, தன் போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து கண்காணிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். மேலும், தன் போர்ட்ஃபோலியோவை ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறையாவது திருப்பி சரி பார்க்க வேண்டும்.