இந்த என்ஹெச்பி சுவ்ரிதி வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு நேஷனல் ஹவுசிங் வங்கி 9.25 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் மற்ற வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தைவிட அதிகம் ஆகும். ஏனெனில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இந்த வைப்புத் தொகை திட்டங்களில் முதலீடு செய்யும் தொகைக்கு 9 சதவீத வட்டியையே வழங்குகின்றன.
மேலும் என்ஹெச்பி சுவ்ரிதி வைப்புத் தொகை திட்டம் மூத்த குடிமக்களின் முதலீட்டிற்கு பிற வங்கிகளை விட .10 சதவீத வட்டி வழங்குகிறது.
நேஷனல் ஹவுசிங் வங்கி இந்திய அரசால் இயக்கப்படும் வங்கியாகும். அதனால் இந்த வங்கியில் செய்யப்படும் முதலீட்டுத் தொகை முழுமையான பாதுகாப்புடன் இருக்கும்.
இந்த வங்கியில் செய்யப்படும் முதலீடு 5 ஆண்டுகளைக் கொண்டது. இந்திய வருமான வரிச் சட்டம் பிரிவு 80 சி, இந்த முதலீட்டுக்கு வரி விலக்கு அளிக்கிறது. இந்த பிரிவின் கீழ் ரூ.1 லட்சம் வரை வரி வலிக்கு பெறலாம்.
இந்த வங்கியில் முதலீடு செய்யப்படும் வைப்புத் தொகைக்கு ஒவ்வொரு காலாண்டு அல்லது ஆண்டு முடிவில் வட்டி வழங்கப்படுகிறது. முதலீட்டாளர் தனக்கு விருப்பமான வட்டி காலத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் 1961ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் வழிகாட்டுதலின்படி வட்டி வழங்கும் காலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது இருக்கும் 1961ம் ஆண்டு வருமான வரிச் சட்டம் பிரிவு யு/எஸ் 194ஏ வழங்கும் சலுகையின்படி ஒருவர் ஒரு நிதியாண்டில் வைப்பு நிதி மூலம் ரூ.5000 வரை வட்டி பெற்றால் அந்த வட்டிக்கு வரி கட்டத் தேவையில்லை.
இந்த நேஷனல் ஹவுசிங் வங்கி, மத்திய ரிசர்வ் வங்கிக்கு சொந்தமானதாகும். இந்த வங்கி மிக எளிமையான முறையில் வீட்டுக் கடன் வசதிகளையும் வழங்குகிறது.