கடனீட்டுப் பத்திரங்கள் ரிஸ்க் இல்லா முதலீடா?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாண்ட் சேஃப் தான், ஆனால் ரிஸ்கும் கூட
சென்னை: கடனீட்டுப் பத்திரம் (பாண்ட்) என்றால் கடன் வாங்குபவர் கடன் வழங்குபவருக்கு வழங்கும் ஒரு அடையாள கடன் பாதுகாப்பு ஆவணம் ஆகும். எனவே நீங்கள் கடனீட்டுப் பத்திரத்தை வாங்குகிறீர்கள் என்றால் அந்த பத்திரத்தை வழங்குபவருக்கு உங்கள் பணத்தைக் கடனாக வழங்குகிறீர்கள் என்று பொருள். ஒருவருக்கு நீங்கள் கடன் வழங்கும் போது அந்த பணம் திரும்பி வருவதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. ஒருவேளை அது வராமலும் இருக்கலாம்.

கடனீட்டுப் பத்திரம் கிரெடிட் ரிஸ்க்கை தாங்கிச் செல்கிறது என்று சொல்லலாம். எனவே ஒரு கடனீட்டுப் பத்திரத்தை வாங்குவதற்கு முன்பாக அதன் கிரெடிட் ரேட்டிங்கை ஆராய்ந்து பார்க்க வேண்டும். சி.ஆர்.ஐ.எஸ்.ஐ.எல். மற்றும் ஐ.சி.ஆர்.ஏ. போன்ற நிறுவனங்கள் கடனீட்டுப் பத்திரங்களின் கிரெடிட் ரேட்டிங்கை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.

கடனீட்டுப் பத்திரத்தில் உள்ள மிக முக்கிய அம்சம் அதன் வட்டி விகிதம் ஆகும். அந்த வட்டி விகிதத்தில் ஒரு சில சிக்கல்களும் உள்ளன. கடனீட்டுப் பத்திரங்கள் மூலம் நமக்கு நல்ல வட்டி கிடைக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த பத்திரங்களை நீங்கள் மீண்டும் விற்கும் போது அதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

உதாரணமாக ரூ.990 மதிப்பிலான ஒரு கடனீட்டுப் பத்திரத்தை வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த கடனீட்டுப் பத்திரம், அதன் பேஸ் வேல்யூவின் அடிப்படையில் உங்களுக்கு அரையாண்டுக்கு ஒரு முறை 10 சதவீத வட்டியை வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் தற்போது ஒரு புதிய கடனீட்டுப் பத்திரம் அதன் பேஸ் வேல்யூவின் அடிப்படையில் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியை வழங்குவதாக உறுதி அளிக்கிறது. இந்த நிலையில் நீங்கள் வைத்திருக்கும் குறைந்த வட்டி விகிதம் கொண்ட கடனீட்டுப் பத்திரத்தை நீங்க விற்க முற்பட்டால் அதை வெகு சிலரே வாங்க முன் வருவர். ஏனெனில் ஏற்கனவே அதிக வட்டியை வழங்கும் புதிய கடனீட்டுப் பத்திரம் சந்தைக்கு வந்திருக்கிறது. ஆகவே இந்த சிக்கலையும் மனதில் கொண்டே கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

கடனீட்டுப் பத்திரங்களில் உள்ள இன்னொரு சிக்கல் என்னவென்றால் அதில் இருக்கும் லிக்விடிட்டி ஆகும். சந்தையில் லிக்விடிட்டி மிகவும் குறைவாக இருக்கும் போது, நீங்கள் உங்கள் கடனீட்டுப் பத்திரத்தை விற்க முற்பட்டால் அதை வாங்குவதற்கு போதுமான முதலீட்டாளர்கள் இருக்க மாட்டார்கள். அதனால் உங்கள் கடனீட்டுப் பத்திரத்தின் விலையும் கணிசமான அளவிற்கு குறைந்துவிடும். எனினும் அரசு வழங்கும் கடனீட்டுப் பத்திரங்களுக்கு எப்போதுமே அதிக மவுசு உண்டு.

சிக்கல்கள் பல இருந்தாலும் கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்வது எப்போதும் லாபகரமாகவே இருக்கும். ஆனால் அதிக லாபத்தை எதிர்பார்க்க முடியாது. சராசரியான லாபத்தைக் கண்டிப்பாக பெறலாம். ஆனால் அதில் உள்ள சிக்கல்களைத் தெரிந்து கொண்டு கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bonds: Are they really a risk– free investment avenue? | பாண்ட் சேஃப் தான், ஆனால் ரிஸ்கும் கூட

A bond is a debt security in which the issuer acknowledges debt to the purchaser. Thus, if you are buying a bond, you are lending your money to the issuer of the bond. And, when you are lending your money to somebody, there is a risk that you do not receive it back. In other terms, bonds carry credit risk (risk of default) with them.
Story first published: Thursday, May 23, 2013, 16:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X