அதிகமாக வரி கட்டுகிறீர்களா?: அப்போ இந்த திட்டங்களில் சேரலாமே

அதிகமாக வரி கட்டுகிறீர்களா?: அப்போ இந்த திட்டங்களில் சேரலாமே
சென்னை: அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் தான் தற்போதுள்ள முதலீட்டு முறைகளிலேயே மிகவும் பாதுகாப்பானவையாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் இந்திய அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்றன. இவற்றில் சில சேமிப்புத் திட்டங்கள் வரி சேமிப்புத் திட்டங்களாகவும் இருப்பதால், முதலீட்டாளர்கள் இவற்றை மிகவும் விரும்பி தேர்ந்தெடுக்கிறார்கள். பொது வருங்கால வைப்பு நிதி(பிபிஎஃப்), தேசிய சேமிப்புப் பத்திரங்கள்(என்.எஸ்.சி.) மற்ரககறும் இதர அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் அளிக்கும் வட்டி விகிதங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

1. பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்)

மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி பொது வருங்கால வைப்பு நிதிக்கு அளிக்கப்படும் வட்டி விகிதமானது 01.04.2013 முதல் 8.8 சதவீதத்திலிருந்து 8.7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒருவர் மிக அதிகமாக வரி செலுத்துபவராயிருந்தால் மட்டுமே பொது வருங்கால வைப்பு நிதி அளிக்கும் வட்டி விகிதம் கவர்ச்சிகரமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

(Aadhaar Card: How to check status online?)

ஒருவர் மிக அதிகமாக வரி செலுத்துபவராக இல்லாத பட்சத்தில் அவர் வங்கி வைப்புகளில் முதலீடு செய்வது தான் சிறந்தது என்பதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் வங்கிகள் தமது வைப்புகளுக்கு 9 முதல் 9.25 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.

2. தேசிய சேமிப்புப் பத்திரங்கள்

தேசிய சேமிப்புப் பத்திரங்களுக்குத் தற்போது ஆண்டுக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ. 1,00,000 வரையான முதலீடுகளுக்கு வருமானவரிச் சட்டம் பிரிவு 80 சி-இன் கீழ் வரி விலக்கு உண்டு. தேசிய சேமிப்புப் பத்திரங்களிலிருந்து பெறப்படும் வருமானத்திலிருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவதில்லை என்பது சுவையான விஷயம்.

3. அஞ்சலக மாதாந்திர சேமிப்புத் திட்டம்(பிஓஎம்எஸ்எஸ்)

அஞ்சலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு தற்போது ஆண்டுக்கு 8.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் இத்திட்டம் மிகச் சிறப்பானதாகும். மேலும், மிக அதிகமான தொகையை முதலீடு செய்ய முடிந்தால், அவர்களுக்கும் இது மிகச் சிறப்பான திட்டமாகும்.

4. போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்ஸ்

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்ஸ் 1, 2, 3, மற்றும் 5 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையக் கூடியவையாக நான்கு வகைகள் உள்ளன. இச்சேமிப்புத் திட்டங்களுக்கு முறையே 8.20 சதவீதம், 8.20 சதவீதம், 8.30 சதவீதம் மற்றும் 8.40 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. வட்டியானது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டுவட்டியாகக் கணக்கிடப்படுகிறது.

2 ஆண்டு அல்லது 3 ஆண்டு அல்லது 5 ஆண்டு காலத்திற்கான தொடர் வைப்புகளை கணக்கு தொடங்கிய ஓராண்டு காலத்திற்குப் பிறகு முன்னதாக முடிக்க விரும்பினால், அவ்வைப்புகளுக்கு முறையே 1 ஆண்டு, 2 அல்லது 3 ஆண்டு காலத்திற்கு என்ன வட்டி அளிக்கப்படுமோ அதிலிருந்து 1 சதவீதம் குறைவாக வட்டி அளிக்கப்படும். இந்நடைமுறையானது 01.12.2011 முதல் மேற்கொள்ளப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+