
நீங்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் பொழுது, நீங்கள் அதை உங்கள் வங்கிக்கு தெரிவித்து, உங்களுடைய டொமஸ்டிக் ரெசிடன்ட் சேமிப்பு கணக்கை என்ஆர்ஓ கணக்காக மாற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையெனில் நீங்கள் ஒரு தகுதி பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர் எனில் அது உங்களுக்கு ஆபத்தாக முடியும்.
நினைவில் வைத்து கொள்ளுங்கள், சேமிப்பு கணக்கின் நிலையை மாற்றும் பொறுப்பு உங்களை சார்ந்தது, வங்கியுடையது அல்ல. மேலும், என்ஆர்ஓ கணக்குகளுக்கு டிடிஎஸ் வரியின் அளவு டொமஸ்டிக் ரெசிடன்ட் சேமிப்பு கணக்கிலிருந்து கழிக்கப்படும் வரியின் அளவை விட மிக அதிகம். எனவே, வெளிநாடு வாழ் இந்தியர்கள் டொமஸ்டிக் ரெசிடன்ட் சேமிப்பு கணக்கை பராமரிப்பது குறைவான வரி செலுத்துவதற்கு செய்யும் ஏற்பாடாக கருதப்படும். இது வரி ஏய்ப்பு போன்றது. இந்தியாவில், இரட்டை குடியுரிமை வசதி இல்லை. எனவே அனைத்து வெளிநாடு வாழ் இந்தியர்களின் டொமஸ்டிக் ரெசிடன்ட் சேமிப்பு கணக்கும் என்ஆர்இ அல்லது என்ஆர்ஓ கணக்காக மாற்றப்பட வேண்டும்.
நீங்கள் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் என்பது எப்படி தெரியும்?
இந்தியாவின் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (எஃப்இஎம்ஏ) படி, ஒரு இந்திய குடிமகன் அல்லது இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வெளிநாட்டவர் வெளிநாடுகளில் வேலை நிமித்தமாகவோ, வியாபார நோக்கமாகவோ, விடுமுறைக்காகவோ நீண்ட காலம் தங்க முற்படும் பொழுது, வெளிநாடு வாழ் இந்தியர் என்கிற தகுதியை பெறுகிறார்.
ஒரு தனி நபர் முந்தைய நிதி ஆண்டில் இந்தியாவில் 182 நாட்களுக்கும் குறைவாக தங்கி இருந்தார் எனில் அவரை ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக கருத முடியும். எனவே, நீங்கள் 182 நாட்களுக்கும் மேலாக வெளிநாட்டில் தங்கி இருந்தால், மேலே கூறிய வரையறை படி நீங்களும் ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக கருதப்படுவீர்கள். மேலே கூறிய அளவுகோல்கள் உங்களுக்கு பொருந்துமெனில் நீங்கள் இன்னும் உங்கள் வங்கிக் கணக்கை மாற்றாமல் வைத்திருந்தால் அதை முதலில் என்ஆர்ஓ அல்லது என்ஆர்இ கணக்காக மாற்ற இதுவே சரியான நேரம் ஆகும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications