ஒவ்வொரு மாதமும் வீட்டுகடன் தவணையை அடைக்க சிரமப்படுபவர்களுக்கு, எஸ்.பி.ஐ மேக்ஸ்கெயின்(SBI Maxgain) என்ற திட்டம் பயனுள்ளதாக இருக்கும். உங்களிடம் அதிக கையிருப்பு இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால், இந்த திட்டத்தை பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் கட்டும் வட்டி சுமையை குறைக்கலாம்.
(Why interest rates on loans will not go down in a hurry?)
வட்டி சுமை குறைக்க மற்றும் ஒவ்வொரு மாதமும் அதிக பணம் கட்ட நினைத்தால் எஸ்.பி.ஐ. மேக்ஸ்கெயின் தான் சிறந்த தேர்வு.
திட்டத்தின் செயல்பாடு
எஸ்.பி.ஐ. மேக்ஸ்கெயின் திட்டத்தின் கீழ் நீங்கள் வீட்டுக்கடன் வாங்கியிருந்தால், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடன் தொகைக்கு ஈடாக மேல்வரைப்பற்று (ஓவர்டிராப்ட்) தொகையை உங்களுக்கு அளிக்கும். இந்த கணக்கில் எப்போதெல்லாம் அதிக பணத்தை வரவு வைக்கிறீர்களோ, அந்த பணம் கடனை திருப்பிச் செலுத்தும் பணமாக எடுத்துக் கொள்ளப்படும். இதனால் வட்டி சுமை குறையும்.
உதாரணம்
எஸ்.பி.ஐ மேக்ஸ்கெயின் திட்டத்தின் கீழ் கட்ட வேண்டிய நிலுவை கடன் தொகை 15 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். இப்போது எஸ்.பி.ஐ மேக்ஸ்கெயின் கணக்கில் 2 லட்சம் இருந்தால், அது கடனுக்கான வரவாக எடுத்துக் கொள்ளப்படும். இதனால் வட்டி சுமை குறையும். மேலும் இது நடப்பு கணக்காக (கரண்ட் அக்கௌன்ட்) இருப்பதால், காசோலை ஏடு, ஏ.டி.எம் மற்றும் டெபிட் கார்டு, இனையதளத்தில் வங்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வசதிகளும் அளிக்கப்படும்.
வட்டி விகிதம்
எஸ்.பி.ஐ பொதுவாக வீட்டுக்கடனுக்கு அளிக்கும் வட்டி விகிதத்தை விட எஸ்.பி.ஐ மேக்ஸ்கெயின் திட்டத்தில் வட்டி விகிதம் அதிகம் தான். இன்றைய நிலவரப்படி வீட்டுகடனுக்கு எஸ்.பி.ஐ 9.95% மிதவை வட்டி வசூல் செய்கிறது. இதுவே மேக்ஸ்கெயின் திட்டம் என்றால் 0.25% அதிகமாக வட்டி வசூலிக்கிறது. இது கடன் தொகை ஒரு கோடிக்கு கீழ் இருந்தால் தான். எஸ்.பி.ஐ மேக்ஸ்கெயின் திட்டத்தில் குறைந்தபட்சமாக ஐந்து லட்சம் கடன் தரப்படும். அதிகபட்ச கடன் தொகைக்கு எந்த வரைமுறையும் இல்லை.
செயல்முறை கட்டணம்
எஸ்.பி.ஐ வாங்கும் அதே செயல்முறை கட்டணத்தை தான் எஸ்.பி.ஐ. மேக்ஸ்கெயின் திட்டமும் வாங்குகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications