முதலில் இந்த ப்ளாக் டீல் என்றால், ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் வழங்கும் ஒரு தனிபட்ட தளம். இத்தகைய தளம் ஒரு நாளில் 35 நிமிடங்கள் மட்டுமே திறந்து இருக்கும். அந்த நேரத்திற்குள் ப்ளாக் டீல் நடைபெற வேண்டும்.
இப்போது, பங்குகளை வாங்குபவரும், அவற்றை விற்பவரும் இணைந்து, தாங்கள் ஒத்துக் கொண்ட பங்குகளின் விலை மதிப்பு, தற்போதைய அல்லது நேற்றைய விலைகளுக்கு அதிகமாகவோ அல்லது 5 சதிவீதம் குறைவாகவோ இல்லை என்று உறுதியளிக்க வேண்டும்.
மேலும் இந்த தளத்தில் ஒத்துக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு வர்த்தகமும், கண்டிப்பாக நடந்து முடிவு பெற வேண்டும். ஒத்துக் கொண்ட வர்த்தகத்திலிருந்து பின் வாங்க முடியாது.
இந்த ப்ளாக் டீல்களில், பங்குகளின் பெயர், பங்கை வைத்திருப்பவரின் பெயர், வாங்கப்பட்ட அல்லது விற்கப்பட்ட பங்குகளின் அளவு, விற்கப்பட்ட விலை மற்றும் இதர விவரங்களை சந்தை முடிந்த பிறகு அதே நாளில் மக்களுக்கு ஸ்டாக் எக்சேஞ்ச் வெளியிட வேண்டும் என்று எஸ்இபிஐ விரும்புகிறது.
மேலும் ப்ளாக் டீலில் வாங்கக்கூடிய பங்குகளின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 5 லட்சம் அளவிற்கு அல்லது பண மதிப்பில் ரூ.5 கோடியாக இருக்கலாம்.
பங்கு வர்த்தகத்தில் இந்த ப்ளாக் டீல் மிகவும் பிரபலமாக உள்ளது. மிகப் பெரிய ப்ளாக் டீல்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மத்தியில் நடைபெறுகின்றன.