தற்போது இந்தியாவில் இருக்கும் நிதி நெருக்கடியிலும், ரிசர்வ் வங்கியின் சமீபத்திய நடவடிக்கைகளால் சரி வர லாபம் ஈட்டாத பங்குகள், சொத்தாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பல பேர் அரசாங்கத்துக்கு சொந்தமான வங்கிகளின் பங்குளை விற்கத் தொடங்கியுள்ளனர். இவ்வகை பங்குகளின் விலை கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு குறைந்த நிலைக்கு இறங்கியுள்ளது.
ஆனால் இதில் அதிகப்படியான பங்குகளின் வணிகம் இப்போது நல்ல விலையில் நடக்கிறது. இப்படி எதிர் நிலையான முறையில் வாங்கும் இந்த பங்குகள் வருங்காலத்தில் அதிக பங்காதாயத்தை கொடுக்கும். ஆனால் அதற்கு குறைந்தது இரண்டு வருடமாவது காத்திருக்க வேண்டும்.
ஒரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்:
ஒரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஜூலை 24-ஆம் தேதி, 52 வார குறைவான அளவாக 163.15 ரூபாயாக இருந்தது. தற்போது இந்த பங்கின் விலை அதன் ஏட்டு மதிப்போடு ஒப்பிடுகையில் வெறும் 0.38 மடங்கிற்கும் P/E-யுடன் ஒப்பிடுகையில் வெறும் 3.61 மடங்கிற்கும் வணிகம் செய்யப்படுகிறது. வருங்காலத்தில் இந்த வருடம் கொடுத்ததை போலவே இந்த வங்கி பங்காதாயத்தை கொடுத்தால், 5%-க்கும் அதிகமாகவே கிடைக்கும்.
கனரா வங்கி:
அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள சிறந்த வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியின் பங்கு 52 வார குறைவான அளவாக 295 ரூபாயாக தேசிய பங்குச் சந்தையில் மாறியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் அதிகப்படியாக 533 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதனால் பாதிக்கு பாதியாக இப்போது இந்த பங்குகளை வாங்கலாம். ஏட்டு விலையோடு ஒப்பிடுகையில் 0.5 மடங்கு குறைந்திருப்பதால் இந்த பங்குகளை தேர்ந்தெடுப்பது சிறந்த முடிவாகும்.
தேனா வங்கி:
மற்ற வங்கிகளை போலவே தேனா வங்கியும் ஜூலை 24-ஆம் தேதி 52 வார குறைந்தபட்ச விலைக்கு இறங்கியது. தற்போது 63.80 ரூபாயாக உள்ள இதன் பங்குகளை வாங்கினால் அதிகப்படியாக 45% பங்காதாயத்தை கொடுக்கும். இது 17% வரி விலக்கு பங்காதாயத்தை ஈட்டித் தரும். வங்கி இதே பங்காதாயத்தை அடுத்த வருடமும் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான் இந்த மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.
யூனியன் பேங்க் ஆப் இந்தியா:
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் பங்கு 52 வார அதிகபட்ச விலையான 288 ரூபாயிலிருந்து பாதிக்கு பாதியாக இப்போது 146 ரூபாய்க்கு இறங்கியுள்ளது. இதன் பங்குகள் ஜூலை 24-ஆம் தேதி தேசிய பங்குச் சந்தையில் 52 வார விலையில் மிக குறைவான விலையாக 145.25 ரூபாய்க்கு கீழிறங்கியது. இதன் விலையை ஏட்டு மதிப்பு மற்றும் வருமான விகிதத்தோடு ஒப்பிடுகையில் தற்போது வாங்குவதற்கு இதுவும் சிறந்த பங்காக விளங்குகிறது.
பேங்க் ஆப் இந்தியா:
பேங்க் ஆப் இந்தியாவின் பங்குகளும் கடந்த ஒரு வருடத்தில் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த விலைக்கு இறங்கியுள்ளது. 195 ரூபாய் மதிப்பில் உள்ள இந்த பங்குகளையும் தற்போது வாங்கலாம்.
More From GoodReturns

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ரூ.4கோடி கார்பஸ்! உங்கள் ரிட்டையர்மென்ட்டை ராஜவாழ்க்கையாக்குவது எப்படி? கோடீஸ்வர கனவு நனவாகுமா?

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!



Click it and Unblock the Notifications