உங்களது மியூச்சுவல் ஃபண்ட் SIP மோசமான நிலையில் உள்ளதா? அல்லது கடந்த ஐந்து வருடங்களாக அதன் நெட் அசட் வாலியூ (NAV) கவலைக்கிடமாக உள்ளதா?. அப்ப நீங்க நேரடியாக பங்கு சந்தையில் முதலீடு செய்யவது சிறந்தது. ஆனால் உங்களுக்கு பங்கு சந்தை பற்றி கொஞ்சம் அனுபவம் இருக்க வேண்டும்.
பங்கு சந்தை தொழில்முறை ஆலோசனையோடு, சந்தை நிலவரங்கள் பற்றி நன்றாக ஆராய்ந்த பின்னர் ஒரு குறிப்பிட்ட தொகையை, ஒரு குறிப்பிட்ட பங்குகளில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தில் நல்ல பலனைத் தரக்கூடிய பங்குகளில் முதலீடு செய்யலாம்.
உதரணமாக, பங்கு சந்தையில் லாபகரமான துறையில் அல்லது சிறப்பாக செயற்படும் நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம். சில தனியார்துறை வங்கிகளின் பங்குகளுக்கு அதிகளவு மதிப்பு கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து பங்கு கொள்முதல் செய்து வருவதால், சந்தை வீழ்ச்சி அடையும் நேரத்தில் ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்க வாய்ப்பு உண்டு.
முன் அனுபவம்
எனினும், ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல், சந்தை பற்றிய அனுபவம், டெக்னிக்ஸ் மற்றும் பங்கு சந்தை பற்றிய அடிப்படை அறிவு கண்டிப்பாக தேவை.
ஆராய்ந்து அறிதல் அவசியம்
ஒரு நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான சாத்தியகூறுகள் மற்றும் ஈபிஎஸ், பி/ஈ ரேஸியோ, புக் வாலியூ, பங்கு லாபம் போன்றவற்றை ஆராய்ந்து அறிதல் அவசியமாகும்.
நிதி இணையத்தளம்
நிதி இணையத்தளங்கள் மூலம் கிடைக்கும் பங்குச்சந்தை பற்றிய தரவுகளின் அடிப்படையில், அவற்றை எவ்வாறு நிர்ணயம் செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
கண்டிப்பான முதலீடு
ஏற்கனவே குறிப்பிட்டது போல், இதில் முக்கியமானது என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட காலம் வரை, ஒவ்வொரு மாதமும் கண்டிப்பாக முதலீடு செய்ய வேண்டும், அப்போது தான் உங்கள் போர்ட்ஃபோலியோ வளர்ச்சி பற்றி உணர முடியும்.
மியூச்சுவல் ஃபண்டு
உங்களால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது சாத்தியமாகவில்லையென்றால், மியூச்சுவல் ஃபண்டிலிருந்து உங்களுக்கு சில காலம் வருமானம் கிடைத்து என்றாலும் கூட, தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பியில் (SIP) உங்கள் முதலீட்டு தொகையை வைத்திருக்க முடியும்.