ரூ.1000 கோடி மதிப்புள்ள வரியில்லா பத்திரங்களை விற்கும் கிராமப்புற மின்சார கழகம்

ரூ.1000 கோடி மதிப்புள்ள வரியில்லா பத்திரங்களை விற்கும் கிராமப்புற மின்சார கழகம்
1000 கோடி மதிப்புள்ள வரியில்லா பத்திரங்கள் வழங்க கிராமப்புற மின்சார கழக (REC) நிறுவனம் முன்வந்துள்ளது. வரும் செப்டம்பர் 23 ஆம் தேதியுடன் பத்திரங்கள் வழங்குவது முடிவு பெறும். இந்த ஆண்டில் கிராமப்புற மின்சார கழக நிறுவனம் தான் முதன்முறையாக வட்டியில்லா பத்திரங்கள் வழங்கும் நிறுவனமாகும்.

வரியில்லா பத்திரங்களுக்கான வட்டி விகிதங்கள் 10 ஆண்டுகளுக்கு 8.01 சதவிதம் என்ற அளவிலும், 15 ஆண்டுகளுக்கு 8.46 சதவிதம் என்ற அளவிலும், மற்றும் 2௦ ஆண்டுகளுக்கு 8.37 சதவிதம் என்ற அளவிலும் இருக்கும். சில்லறை முதலீட்டாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு 8.26 சதவிதம் என்ற அளவிலும், 15 ஆண்டுகளுக்கு 8.71 சதவிதம் என்ற அளவிலும் மற்றும் 2௦ ஆண்டுகளுக்கு 8.62 சதவிதம் என்ற அளவிலும் பத்திரங்கள் வழங்கப்படும்.

வரியில்லா பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டிதொகைக்கு வரி விதிக்கப்படாது.

கிராமப்புற மின்சார கழக நிறுவனம் மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய ஒரு மத்திய பொது துறை நிறுவனமாகும்.

கிராமப்புற மின்சார கழகம், மாநில மின் வாரியங்கள் மற்றும் மாநில மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு, கிராமப்புற மின்திட்டங்களுக்கான முதலீடுகளுக்கு கடனுதவி அளிக்கும். அதன் தலைமை அலுவலகம் டெல்லியில் அமைந்துள்ளது மேலும் அக்கழகத்தின் திட்ட அலுவலகங்கள் 17 மாநிலங்களில் அமைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+