ரூ.1000 கோடி மதிப்புள்ள வரியில்லா பத்திரங்களை விற்கும் கிராமப்புற மின்சார கழகம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரூ.1000 கோடி மதிப்புள்ள வரியில்லா பத்திரங்களை விற்கும் கிராமப்புற மின்சார கழகம்
1000 கோடி மதிப்புள்ள வரியில்லா பத்திரங்கள் வழங்க கிராமப்புற மின்சார கழக (REC) நிறுவனம் முன்வந்துள்ளது. வரும் செப்டம்பர் 23 ஆம் தேதியுடன் பத்திரங்கள் வழங்குவது முடிவு பெறும். இந்த ஆண்டில் கிராமப்புற மின்சார கழக நிறுவனம் தான் முதன்முறையாக வட்டியில்லா பத்திரங்கள் வழங்கும் நிறுவனமாகும்.

வரியில்லா பத்திரங்களுக்கான வட்டி விகிதங்கள் 10 ஆண்டுகளுக்கு 8.01 சதவிதம் என்ற அளவிலும், 15 ஆண்டுகளுக்கு 8.46 சதவிதம் என்ற அளவிலும், மற்றும் 2௦ ஆண்டுகளுக்கு 8.37 சதவிதம் என்ற அளவிலும் இருக்கும். சில்லறை முதலீட்டாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு 8.26 சதவிதம் என்ற அளவிலும், 15 ஆண்டுகளுக்கு 8.71 சதவிதம் என்ற அளவிலும் மற்றும் 2௦ ஆண்டுகளுக்கு 8.62 சதவிதம் என்ற அளவிலும் பத்திரங்கள் வழங்கப்படும்.

வரியில்லா பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டிதொகைக்கு வரி விதிக்கப்படாது.

கிராமப்புற மின்சார கழக நிறுவனம் மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய ஒரு மத்திய பொது துறை நிறுவனமாகும்.

கிராமப்புற மின்சார கழகம், மாநில மின் வாரியங்கள் மற்றும் மாநில மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு, கிராமப்புற மின்திட்டங்களுக்கான முதலீடுகளுக்கு கடனுதவி அளிக்கும். அதன் தலைமை அலுவலகம் டெல்லியில் அமைந்துள்ளது மேலும் அக்கழகத்தின் திட்ட அலுவலகங்கள் 17 மாநிலங்களில் அமைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

REC to issue tax free bonds aggregating Rs 1000 crores

The Rural Electrification Corporation (REC) is coming with a tax free issue of bonds aggregating Rs 1000 crores.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X