சென்னை: சந்தைகளில் பரவலாக கிடைத்து வரும் பல்வேறு மியூச்சுவல் ஃபண்டு (Mutual Fund) திட்டங்களில், நமக்கு ஏற்ற சரியான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடும் கதை தான்.
மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்கும் முன்னர் உங்களால் எந்த அளவிற்கு ரிஸ்க்-ஐ தாங்கிக் கொள்ள முடியும் என்று மதிப்பிட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் 20 முதல் 40 வயதுக்குள் உள்ளவராக இருந்தால், அதிகபட்ச ரிஸ்க்கை தாங்கிக் கொள்ள முடியும்.
ஈக்விட்டி திட்டங்கள்
ஈக்விட்டி திட்டங்களை தேர்ந்தெடுக்கும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அதே நேரம், நீங்கள் ஓய்வு பெற்றவராக இருந்தால், கடன் சார்ந்த திட்டங்களை தேர்ந்தெடுப்பது நல்ல தேர்வாக இருக்கும்.
பங்கு சந்தை
பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும் வேளையில், அதிகமான NAV-க்கு கிடைக்கும் வகையில் திட்டங்களை வாங்கி விட்டு, ஈக்விட்டி திட்டங்களை வாங்குவதை நீங்கள் தவிர்த்து விட வேண்டும்.
கடன் சந்தை
சந்தை மதிப்பு உச்சத்தில் இருக்கும் வேளையில், பணத்தை கடன் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள் மற்றும் அவை விழும் போது வேகமாக ஈக்விட்டி திட்டங்களாக மாற்றி விடுங்கள். கடந்த கால செயல்பாடுகளுக்கும், எதிர்கால செயல்பாடுகளுக்கும் தொடர்பு கிடையாது
ஆட்டு மந்தை
மேற்கண்ட இந்த உண்மையை சுட்டிக் காட்டும் விளம்பரங்கள் பலவற்றை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். ஆனால், கடந்த காலத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்ட மியூச்சுவல் ஃபண்ட், எதிர்காலத்திலும் அதே போல இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. எனவே, ஆட்டு மந்தையைப் போல பின் தொடர்ந்து செல்ல வேண்டாம்.
வல்லுநரின் ஆலோசனை
சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட துறையில் உள்ள குறிப்பிட்ட திட்டம் பற்றிய விளக்கத்தை வல்லுநர் ஒருவரிடம் கேட்பது நல்லது. எடுத்துக்காட்டாக, இப்போதைய சூழலில், மருந்துத் துறை பங்குகள் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் அதை வாங்க வேண்டாம் என்று நினைப்பீர்கள். ஏனெனில், அதன் NAV ஏற்கனவே அதிகமாக இருக்கும்.
பொருளாதார சீரற்ற நிலை
இப்போதைய சூழலில், நீங்கள் பொருளாதார நிலையால் சீரற்றதாக இருக்கும் துறைகளுடன் தொடர்புள்ள கட்டுமானம், மூலதன பொருட்கள் மற்றும் வங்கித் துறை ஆகியவற்றை வாங்க நினைப்பீர்கள். ஏனெனில் பொருளாதாரம் கீழே இறங்கி உள்ளது. எனவே, உங்களின் முடிவு சரியானத என ஒரு வல்லுநரின் ஆலோசனையின் பேரில் செயல்படுவது நல்லது.
மியூச்சுவல் ஃபண்டு
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு என்று நிலையான மந்திரமோ, வழிமுறையோ கிடையாது. சில நேரங்களில், அது வாய்பபை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.
எல்லாம் லக்கு தான பாஸ்
நீங்கள் தேர்தெடுத்த துறையின் பங்குகள் சரியானதாக இருந்தால், பலன்களை பெற்றுக் கொண்டிருப்பீர்கள் அல்லது வங்கிகளில் நிலையான வைப்பு நிதியுடன் மேன்மையாக இருப்பீர்கள்.