வங்கியில் பெரும் தொகையைப் போடப்போகிறீர்களா? முதல்ல இதைப் படியுங்க...

சென்னை: முறைகேடான பணப் பரிமாற்றங்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பணம்செலுத்துபவர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஏதுவாகப் பல வழிகாட்டு விதிமுறைகளை வங்கிகளுக்கு வகுத்துத்தந்துள்ளது.

அதன் மூலம் பின்பற்றப்படும் நடைமுறைகள் நிதி மோசடிகளைத் தடுக்கவும், முறைகேடான பணப் பரிமாற்றங்களைமற்றும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டறியவும், பெரும் தொகைகள் பரிமாற்றங்களைக்கண்காணிக்கவும் பயன்படும்.

நோ யுவர் கஸ்டமர் எனப்படும் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளும் நடைமுறை (கேஒய்சி) வங்கிகளுக்குக்கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகள் கணக்கைத் துவங்கும் ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்தைப் பற்றியவிவரங்களைப் பெற முடியும்.

வங்கியில் பெரும் தொகையைப் போடப்போகிறீர்களா? முதல்ல இதைப் படியுங்க...

ஏன் இந்த நடைமுறை வங்கிகளில் பின்பற்றப் படுகிறது..?. இந்த நடைமுறைகள் முக்கியமாகப் பின்வரும்காரணங்களுக்காக வங்கிகளால் பின்பற்றப்படுகிறது:

1. வாடிக்கையாளரைச் சரியான முறையில் அடையாளம் காணுதல்

2. சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க.

3. வங்கிகள் தங்கள் புதிய வாடிக்கையாளரின் அடையாளங்களைச் சட்டப்படி உறுதிப்படுத்தத் தேவையான அனைத்துவிவரங்களையும் வாடிக்கையாளர்கள் அளிக்கும் விவரங்களின் அடிப்படையிலேயே பெற்றுக் கொள்ளும்.

4. வாடிக்கையாளர்களின் விவரங்கள், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்படும்.

5. எனினும் அவ்வாறான ஆவணங்கள் இல்லாத நிலையில், மற்ற வாடிக்கையாளர்கள் அல்லது வங்கிக்கு அறிமுகம் உள்ளஒரு நபர் கொடுக்கும் விவரங்களின் அடிப்படையில் விவரங்கள் சரிபார்க்கப்படும்.

வங்கியில் பெரும் தொகையைப் போடப்போகிறீர்களா? முதல்ல இதைப் படியுங்க...

பணப் பரிமாற்றங்களுக்கான வரம்பு மற்றும் கண்காணிப்பு விவரங்கள் பின்வருமாறு:

1. வங்கிகள் ஒரு வாடிக்கையாளர் கேட்கும் ரூபாய் ஐம்பதாயிரம் மற்றும் அதற்கும் அதிகமான தொகைக்கான பயணக்காசோலை (ட்ராவலர்ஸ் செக்), வரவோலை (டிமான்ட் டராஃப்ட்), அஞ்சல் பணப் பரிமாற்றம் (மெயில் ட்ரான்ஸ்ஃபர்) மற்றும்தொலைவு அஞ்சல் பரிமாற்றம் (டெலிகிராபிக் ட்ரான்ஸ்ஃபர்) ஆகிய விண்ணப்பங்களுக்கு அவருடைய வங்கிக் கணக்கில்நேரடியாகப் பற்று வைப்பதன் மூலமோ அல்லது காசோலைகள் மூலமொ மட்டுமே பணம் பெற இயலும். பணம் கட்டிமேற்சொன்ன வசதிகளைப் பெற இயலாது.

2. மேலும் மேற்கூறிய சேவைகளைப் பெற விரும்புவோர் அந்தத் தொகை ரூபாய் பத்தாயிரத்திற்கும் அதிகமாகஇருக்குமானால் தங்களுடைய நிரந்தரக் கணக்கு எண்ணைக் (பான் நம்பர்) குறிப்பிட வேண்டியது அவசியம்.

3. ரூபாய் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான தொகையுள்ள பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர் விவரம் (கேஒய்சி)அனைத்து தகவல்களையும் தந்துவிடும் என்பதாலும் அது நேரடியாகக் கணக்கிலிருந்து பெறப்படும் என்பதாலும் இந்தப்பான் எண்ணை குறிப்பிடப் படவேண்டிய வரம்பு ஐம்பதாயிரம் ரூயாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

வங்கியில் பெரும் தொகையைப் போடப்போகிறீர்களா? முதல்ல இதைப் படியுங்க...

4. ஆர்பிஐ-யின் வழிமுறைகள்படி வங்கிகள் பத்து லட்சம் அல்லது அதற்கும் அதிகமான மதிப்புள்ள வைப்பு, பணக்கடன்அல்லது இருப்பை மீறியக் கடன் (ஓவர் டிராஃப்ட்) பரிவர்த்தனைகளை வங்கிகள் கண்காணிக்க வேண்டும். இவற்றைப்பற்றிய விவரங்கள் ஒரு தனிப் பதிவேட்டில் குறிப்பிடப் படவேண்டும்.

5. வங்கிகளின் கிளைகள் பத்து லட்சம் அல்லது அதற்கும் அதிகம் மதிப்புள்ள பணம் செலுத்துகை மற்றும் பணமெடுப்புஉள்ளிட்ட பரிவர்த்தனைகளையும் சந்தேகத்திற்கு இடமான பரிவர்த்தனைகளையும் முழு விவரங்களுடன் தங்களுடையகட்டுப்பாட்டு அலுவலகங்களுக்கு இரு வாரங்களுக்கு ஒருமுறை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

நீங்கள் கணக்கு வைத்துள்ள கிளை அல்லாத வேறொரு கிளையில் பெரிய தொகையை உங்கள் கணக்கில் செலுத்த வங்கிமற்றும் செலுத்தப்படும் தொகையைப் கட்டணம் வசூலிக்கப்படும். சில வங்கிகள் இவ்வாறு வேறு கிளைகளில் அதிகப்பணம் எடுப்பதற்கும் கூடக் கட்டணம் வசூலிக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+