சென்னை: முதன்மைப் பொதுப் பங்குகள் வெளியீடுகள் (ஐபிஓ) எனப்படுவதும் ஒரு நிறுவனம் முதல் முறையாகப் புதிய பங்குகளை முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதைக் குறிக்கும். நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தைப் பெருக்க நிதி ஆதாரங்களுக்காக இந்த முறையைப் பயன்படுத்துகின்றன.
ஒரு நிறுவனம் ஐபிஓ- வை வெளியிட்டால் அதன் பங்குகளைத் தடையின்றிப் பங்குச் சந்தைகளில் விற்கவோ வாங்கவோ முடியும்.
அண்மையில், இன்டெர் குளோப் ஏவியேஷன், கபே காபி டே போன்ற நிறுவனங்கள் முதன்மைப் பங்குகளை வெளியிட்டு அவை பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 முக்கிய விதிகள் இதோ:
பதிவேட்டு மதிப்பீடு
பதிவேட்டு மதிப்பீடு அல்லது புக் பில்டிங் எனப்படுவது ஒரு நிறுவனம் வெளியிட விரும்புகிற பங்குகளின் மதிப்பை அறியப் பயன்படுத்தப்படும் வழிமுறை. இந்த முறையில் முதலீட்டாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட விலையில் பங்குகளை ஒதுக்கீடு செய்யப்படும் அல்லது அந்தப் பங்குகளுக்கு ஒரு குறிப்பிட்ட விலை வரையறைகளை நிர்ணயம் செய்யப்படும்.
மேலும் சந்தையில் பங்குகளின் தேவை மற்றும் அளிப்பு ஆகியவற்றைப் பொறுத்து பங்குகளின் குறைந்தபட்ச விலை அல்லது வெளியிடப்பட்ட விலை நிர்ணயிக்கப்படுகிறது.
நிலைத்தன்மை கால நிலை (கூலிங் ஆ பீரியட்)
இந்தியப் பங்குகள் பரிவர்த்தனை வாரியம் அல்லது செபி அமைப்பிடம் ஒரு நிறுவனம் பதிவிற்கான அறிக்கையைத் தரும் நேரத்திலிருந்து பங்குகளை வெளியிடும் நேரம் வரை உள்ள காலகட்டம் இந்தக் கூலிங் ஆ பீரியட் எனப்படும்.
இந்தக் காலம் சுமார் 20 நாட்கள் வரை இருக்கலாம். இந்தக் காலகட்டத்தில் நிறுவனத்தின் தலைமை மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து அறிவிப்புகள் வெளியிட்டு புதிய வாடிக்கையாளர்களின் விருப்பத்தைக் கருத்தில் எடுத்துக்கொள்வர்.
ரெட் ஹெர்ரிங் கையேடு
இது பங்குகளைப் பற்றிய விவரங்களை அடக்கிய முதல் நிலை வரைவுக் கையேடு. ஆனால் இதில் பங்குகள் எண்ணிக்கை மற்றும் விலை அல்லது மொத்த மதிப்பு ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்காது.
தலைமைகுழு (Syndicate) உறுப்பினர்
மதிப்பீட்டுப் பங்கு வெளியீட்டில் ஏலப் படிவங்களைப் பெற்றுக்கொள்பவர்கள் இந்தத் தலைமைக் குழு உறுப்பினர்கள் ஆவர். இந்த மதிப்பீட்டாளர்கள் (புக் ரன்னர்ஸ்) அங்கீகரிக்கப்பட்ட இடைத்தரகர்களை நியமிக்கின்றனர். இந்த இடைத் தரகர்கள் தலைமைக் குழு உறுப்பினர்கள் சார்பில் விண்ணப்பங்களைப் பெரும் வேலையை (அண்டர்ரைடிங்) செய்வார்கள்.
வழிகாட்டி மேலாளர் (லீட் மேனேஜர்)
ஒவ்வொரு வெளியீட்டு நடைமுறையின் போதும் வழிகாட்டி மேலாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள், மேலாண்மை, வர்த்தகத் திட்டங்கள் மற்றும் சட்ட விதிமுறைகள் ஆகியவற்றிகுப் பொறுப்பாகச் செயல்படுவர்.
ஆவணங்கள், கையேடு, சட்ட ரீதியான அறிவிப்புகள் மற்றும் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின் சாராம்சம் (மேமொராண்டம்) ஆகிவையும் வழிகாட்டி மேலாளர் அல்லது லீட் மேனேஜரால் வடிவமைக்கப்படும்.
பங்கு விற்பனைப் பிரதிநிதித்துவம் (அண்டர்ரைடிங்)
இந்தப் பிரதிநிதிகள் தலைமைக் குழுவுடன் இணைந்து செயலாற்றவும், உறுப்பினர் பங்குகளை விநியோகிக்கவும் செயல்முறைகளில் உறுதித் தன்மையை ஏற்படுத்தவும் பொறுப்பேற்கின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் வங்கிகளாகவோ, தரகர்களாகவோ, வர்த்தக வங்கிகளாகவோ அல்லது நிதி நிறுவனமாகவோ இருப்பார்கள்.