புதிய 500 ரூபாய் நோட்டுகளை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

2000 ரூபாய், 100 மற்றும் அதற்கான குறைவான ரூபாய் நோட்டுகளைத் தவிர பிற ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி சென்ற செவ்வாய்க்கிழமை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அறிவித்தது குறிப்பிடத்த

ஞயாயிற்றுக்கிழமை முதல் புதிய பாதுகாப்பான 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துள்ளது. இதை வழங்குவதற்காக வங்கிகளை முன்கூடியே ஏற்பாடு செய்யுமாறு நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் பணம் வழங்கும் போது பெண்கள் மற்றும் முதியோருக்கான சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள சில எஸ்பிஐ வங்கிகளின் கிளைகளில் மட்டும் இரண்டு நாட்களாக புதிய 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

2000 ரூபாய், 100 மற்றும் அதற்கான குறைவான ரூபாய் நோட்டுகளைத் தவிர பிற ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி சென்ற செவ்வாய்க்கிழமை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

நெருக்கடிகள் குறைக்கப்படும்

நெருக்கடிகள் குறைக்கப்படும்

100 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதில் வங்கிகள் பல சிரமங்கள் சந்தித்து வரும் நிலையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அனைத்து வங்கிகளிலும் நாளை முதல் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் ரொக்க கையிருப்பு மற்றும் சந்தையில் பணப்புழக்கம் மேம்படுத்தப்படும்

ஆசிடப்பட்ட ஆண்டும், ஆளுநரும்

ஆசிடப்பட்ட ஆண்டும், ஆளுநரும்

மத்திய வங்கியின் அறிவிப்பின் படி இந்த புதிய ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கையெழுத்துடன் வெளியிடப்படுகிறது என்றும் பணம் அச்சிடப்பட்ட ஆண்டாக 2016 ஆம் ஆண்டும், சுத்தமான இந்தியா திட்டத்தின் குறியீடும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

புதிய மாற்றங்கள்

புதிய மாற்றங்கள்

புதிய 500 ரூபாய் நோட்டு வண்ணம், அளவு, வடிவமைப்பு, பாதுகாப்பு குறியீடுகளின் இருப்பிடம் போன்றவை வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

புதிய 500 ரூபாய் நோட்டின் முன்புறம் மகாத்மா காந்தி உருவம், அசோகத் தூண் சின்னம், கோடுகள் மற்றும் அடையாள குறிகள் இடம்பெற்றுள்ளன. இது பழைய 500,1000 ரூபாய் நோட்டிலும் இடம்பெற்றிருந்தது.

மகாத்மா காந்தியின் புகைப்படம் நோட்டின் வலதுபுறத்தில் இருந்து மையப்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

பணத்தின் மதிப்பான 500-இன் நியூமரிக்கல் எண் நோட்டின் வலது கீழ் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இந்த எண் பச்சை - நீலம் நிறமாக மாறக்கூடியதாக இடது பக்கத்தில் தேவநாகிரி மொழியிலும் இடம்பெற்றுள்ளது.

வலது புரத்தில் அசோகர் தூண் சின்னமும், ஆர்பிஐ சின்னமும் மாற்றப்பட்டுள்ளது.

புதிய 1000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் செயற்கை கோள் உள்ளதைப் போன்று உள்ளதைப் போன்று புதிய 500 ரூபாய் நோட்டில் செங்கோட்டையின் படம் அச்சிடப்பட்டு இருக்கும்.

 

கண்பார்வையற்றோருக்கான குறியீடுகள்

கண்பார்வையற்றோருக்கான குறியீடுகள்

செதுக்கு அல்லது மகாத்மா காந்தி உருவப்படம், அசோகா தூண் சின்னம் எழுப்பியது அச்சிடும், கோடுகள் மற்றும் அடையாள குறி தொடர்ந்து இருக்கும்.

கண்பார்வையற்றோர்க்கு வசதியாக நோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் 5 கோடுகளும் வலதுபுறத்தில் வட்டமாக ரூபாய் 500 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+