செல்வ மகள் திட்டத்தில் கணக்கை எப்படித் துவங்குவது..?

சம்ரிதி யோஜனா திட்டம் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக பயன்பாட்டில் உள்ளது.

பெண் குழந்தைகளின் சேமிப்பு திட்டமாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இத் திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக பயன்பாட்டில் உள்ளது.

10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் தொடங்கலாம்.

பொதுவாக அனைத்து வங்கிகளும் செல்வ மகள் திட்ட கணக்குடன் ஒரு பிபிஎப் கணக்கை வழங்குகின்றன.

செல்வ மகள் திட்டத்தில் கணக்கைத் துவங்க தேவையான ஆவணங்கள்?

செல்வ மகள் திட்டத்தில் கணக்கைத் துவங்க தேவையான ஆவணங்கள்?

1. செல்வ மகள் திட்டம் கணக்கைத் துவங்குவதற்கான விண்ணப்பப் படிவம்.

2. பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்

3. பெற்றோர் அல்லது காப்பாளரின் அடையாள சான்றிதழ். இது பான் கார்டு, கூட்டுறவு அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் என ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம்.

4. பெற்றோர் அல்லது காப்பாளரின் முகவரி சான்றிதழ். இது கூட்டுறவு அட்டை, பாஸ்போர்ட், மின்சார கட்டண ரசீது, தொலைப்பேசி கட்டண ரசீது என ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம்.

 

விண்ணப்பம்

விண்ணப்பம்

கணக்கைத் துவங்குவதற்கான விண்ணப்பம் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் கிடைக்கும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

 

கணக்குப் புத்தகம் பெறுதல்

கணக்குப் புத்தகம் பெறுதல்

ஒருவர் கணக்கை துவங்கிய உடன் அவருக்கு வங்கி கணக்கை போன்ற புத்தகம் ஒன்று வழங்கப்படும்

மாதிரி கணக்குப் புத்தகத்தை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

 

பரிவர்த்தனை

பரிவர்த்தனை

செல்வ மகள் திட்டத்தில் பணத்தைச் செலுத்த நேரடி வங்கி கவுண்டர்கள் அல்லது இணையதள வங்கி கணக்கு மூலமாகவும் செலுத்தலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+