500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீர் என்று அறிவித்த உடன் பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த ஆதரவாக அமைந்தது.
தனது வாடிக்கையாளர்கள் எளிமையாக தங்களது தினசரி பணிகளை, பண பிரச்சனை ஏதும் இல்லாமல் பரிவத்தனை செய்ய பேடிஎம் உடனடி வங்கி பரிமாற்ற முறையைச் செயல்படுத்தி வருகின்றது.
பேடிஎம் வாலெட்டில் உள்ள தொகையை உடனடியாக வங்கி கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்வது மட்டும் இல்லாமல் சில நொடிகளில் பெறுநரின் வங்கி கணக்கில் தொகை பிரதிபலிக்க வைக்கும் அளவிற்கு வேகமாகச் செயல்பட்டது.
பணம் தாமதமாக செல்வதற்கான காரணங்கள்
உங்கள் பேடிஎம் வாலெட் பக்கத்தில் இருந்து பணத்தை வங்கி கணக்கிற்கு அனுப்பவும் என்பதை அழுத்திய உடன் சில நேரம் தாமதமாக வங்கி கணக்கிற்கு பணம் செல்வதற்கான காரணங்கள் பற்றி இங்குப் பார்ப்போம்.
வங்கியின் நெட்வொர்க் செயல்படாத நேரத்தில் அல்லது நெட்வொர்க் ஏற்ற இறக்கத்தினால் சம்மந்தப்பட்ட வங்கி பேடிஎம்-ன் கோரிக்கையை ஏற்க முடியாத நிலையில் பணம் பரிமாற்ற சிக்கலை தீர்க்க மூன்று நாட்கள் வரை எடுத்துக்கொள்ளப்படும்.
தீராத சிக்கல்
ஒரு வேலை மூன்று நாட்களில் பண பரிமாற்றம் நடக்கவில்லை என்றால் வாடிக்கையாளரின் பேடிஎம் வாலெட்டில் பணம் வரவு வைக்கப்படும்.
பரிவர்த்தனை தாமதம்
உடனடியாக பண பரிவர்த்தனை செய்யும் போது அவ்வப்போது வங்கி நேரம் அல்லது இந்திய தேசிய பண பரிவர்த்தனை சபை செயல்படாத நேரத்திலும் மூன்று நாட்கள் வரை பண பரிமாற்றம் செய்ய நேரம் எடுத்துக்கொள்ளப்படும். இதற்கான தகவலை பேடிஎம் சம்மந்தப்பட்ட பயனருக்கு குறுந்தகவல் மூலம் அறிவிக்கும்.
பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கோரிக்கை
ஒரு வேலைப் பயனர் பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கோரிக்கை வைக்கிறார் என்றால் பேடிஎம் உடனே அந்தக் கோரிக்கையை பெற்றும் திரும்ப அளிக்கும், சம்மந்தப்பட்ட வங்கிகள் 24 முதல் 48 மணிநேரம் வரை உங்கள் கணக்கில் பணத்தை வரவு வைக்க நேரம் எடுத்துக்கொள்ளும்.
குறிப்பு எண்
v