கிராஜுவிட்டி பற்றி நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..!

கிராஜுவிட்டி பற்றி நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: கிராஜுவிட்டி (பணிக்கொடை) என்பது ஊழியர்கள் நிறுவனத்திற்கு ஆற்றிய சேவைகளைக் கௌரவிக்கும் வகையில் நிறுவனத்தினால் அவர்களுக்கு வழங்கப்படும் பயனுள்ளதொரு பணி ஓய்வுத் தொகையே கிராஜூட்டி. ஊழியர்கள் பல்வேறு காரணங்களின் பொருட்டுத் தங்கள் பணியை விட்டு விலக நேரிடலாம், ஆனால் கிராஜுவிட்டித் தொகை குறிப்பாகப் பணி ஓய்வின் போது கைகொடுக்கக் கூடிய ஒன்று.

 

பணிக்கொடை என்றால் என்ன?

பணிக்கொடை என்றால் என்ன?

பணிக்கொடை என்பது ஒரு பணியாளரால் அவர் ஒரு நிறுவனத்திற்குச் செய்த சேவைகளுக்காக நன்றி செலுத்தும் விதமாகத் தரப்படும் நற்பயன் ஆகும்.

ஒரு முதலாளியுடன் ஒரு பணியாளர் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் சேவையை நிறைவு செய்திருந்தால் பணிக்கொடை செலுத்தப்படுகிறது.

 

பணிக்கொடையைப் பெறுவதற்கான தகுதி என்ன?

பணிக்கொடையைப் பெறுவதற்கான தகுதி என்ன?

பின்வரும் நிபந்தனைகளின் கீழ் ஒரு பணியாளர் பணிக்கொடையைப் பெறுவதற்குத் தகுதியுடையவராகிறார். அவர் அல்லது அவள் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெறும்போது, ஒரு முதலாளி பதவி விட்டு விலகும்போது, ஒரு ஒற்றை முதலாளியுடன் தொடர்ந்து 5 வருடங்கள் பணியாற்றிய பிறகு, ஒரு முதலாளி இறந்தாலோ அல்லது நோய் அல்லது விபத்துக் காரணமாக உடல் ஊனத்தால் பாதிப்படைந்தாலோ.

தொகை என்னவாக இருக்கும்?
 

தொகை என்னவாக இருக்கும்?

பணிக்கொடை தொகையானது ஒரு பணியாளர் பணிசேவை ஆற்றிய காலம் மற்றும் அவரால் கடைசியாகப் பெறப்பட்ட ஊதியத்தைப் பொறுத்து வழங்கப்படுகிறது. இது ஒரு கணக்கு விதிமுறையைப் பொறுத்துக் கணக்கிடப்படுகிறது: கடைசியாகப் பெறப்பட்ட சம்பளம் (அடிப்படை ஊதியம் + அக விலைப்படி) X சேவை நிறைவு செய்யப்பட்ட வருடங்களின் எண்ணிக்கை X 15/26.

காலக் கணக்கீடு

காலக் கணக்கீடு

இங்கே ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலகட்டம் ஒரு வருடமாகக் கருதப்படுகிறது. இதற்கு அர்த்தம் என்னவென்றால் நீங்கள் ஐந்து வருடங்கள் மற்றும் ஏழு மாதங்கள் சேவையை நிறைவு செய்திருந்தால் பணிக்கொடை நற்பயன் கணக்கீட்டிற்காக வருடங்களின் எண்ணிக்கை ஆறாகக் கருதப்படும். ஆனால் நேர்மாறாகச் சேவை ஆற்றிய காலம் ஐந்து வருடங்கள் மற்றும் ஐந்து மாதங்களாக இருந்தால் பணிக்கொடை கணக்கீட்டிற்கு அது ஐந்து வருடங்களாகவே கருதப்படும்.

எந்தப் பணியாளர்கள் பணிக் கொடையைப் பெறுகிறார்கள்?

எந்தப் பணியாளர்கள் பணிக் கொடையைப் பெறுகிறார்கள்?

பணிக் கொடை பண வழங்கீட்டுச் சட்டம், 1972 ன் படி, சுரங்கங்கள், தொழிற்சாலைகள், எண்ணெய் நிறுவனங்கள், துறைமுகங்கள், இரயில்வே, நிறுவனங்கள், கடைகள் மற்றும் இது தொடர்பான இதர ஸ்தாபனங்களில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பொருந்தும். அனைத்து விதமான அரசாங்க வேலைகளும் பணிக் கொடை சட்டத்தின் கீழ் வருகின்றன. ஜம்மு மற்றும் காஷ்மீரைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் இது பொருந்தக் கூடியது.

வாரிசு நியமனம்.

வாரிசு நியமனம்.

பணியாளர்கள் ஒரு வேளை அவர்கள் இறந்துவிட்டால் பணிக் கொடையைப் பெறுவதற்கு யாரேனும் ஒருவரை நியமிக்கலாம். பணிக்கொடை தொகையைப் பெறுவதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாரிசுதாரர்களை நியமிக்க ஒரு பணியாளர் நிறுவனத்தில் சேரும்போது படிவம் எஃப் ஐ நிரப்ப வேண்டியது தேவையாகும். அரசாங்க ஊழ்யர்களுக்கான பணிக்கொடைக்கு வரி.

வரி விதிப்பு

வரி விதிப்பு

தற்சமயம் ஒரு பணியாளரின் பணி ஓய்வின்போது அல்லது இறப்பின்போது பெறப்படும் முழுமையான பணிக்கொடை தொகைக்கு வரிப் பிடித்தம் இல்லை. ஒரு பணியாளரால் அவர் அல்லது அவள் பணியில் இருக்கும் காலத்தில் பெறப்படும் எந்த ஒரு பணிக்கொடை தொகைக்கும் வரி விதிப்பு இருக்கிறது. மற்ற தனியார் ஊழியர்களின் வழக்கில், தற்போதைய பணிக்கொடை மீதான வருமான வரி விதிகள், அந்தப் பணியாளர் பணிக்கொடை பண வழங்கீட்டுச் சட்டம் 1972 ன் கீழ் இடம் பெறுகிறாரா அல்லது இல்லையா என்பதைப் பொறுத்து உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What Is Gratuity? Here Are 5 Things To Know

What Is Gratuity? Here Are 5 Things To Know
Story first published: Tuesday, April 4, 2017, 14:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X