முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்கள் (SIP) என்பது ஒரு நிலையான முன்கூட்டி முடிவு செய்யப்பட்ட மொத்த தொகையை முன் கூட்டி குறிப்பிடப்பட்ட அடிப்படையில் வழக்கமான கால இடைவேளைகளில் பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்யும் ஒரு முதலீட்டு முறையாகும்.
ஒரு நிலையான முன்கூட்டி முடிவு செய்யப்பட்ட மொத்த தொகையை முதலீடு செய்யும் போது, அது உங்களை ஒரு மாதத்தின் குறிப்பிட்ட தேதியில் அலகுகளை வாங்க அனுமதிக்கிறது. அது நீங்கள் பிரதி மாதமும் சேமிக்க உதவுகிறது. எஸ்ஐபி (SIP) யில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு தனி மனிதர் முதலீட்டின் சராசரி விலையைப் பெறுவதோடு மற்றும் கூட்டு வட்டித் தொகையாக்கத்திலிருந்து பயன்களைப் பெறுவார்.
தனி நபர்களுக்கு அளவை அடிப்படையாகக் கொண்ட மற்றும் தொகையை அடிப்படையாகக் கொண்ட எஸ்ஐபி (SIP) களுக்கு இடையே பங்குகள், மியூச்சுவல் ஃபண்டு, பரிமாற்ற வர்த்தக நிதி மற்றும் தங்கம் ஆகியவற்றில் விருப்பத் தேர்வை தேர்ந்தெடுத்துக் கொள்ளத் தேர்வுகள் உள்ளன.
1) சிறிய தொகையில் முதலீடுகள்
முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்களின் கீழ் ஒருவர் பரஸ்பர நிதிகளில் ஒரு சிறிய தொகையை மிகக் குறைந்த அளவான ரூ. 1000 த்தை கூட முதலீடு செய்வதைத் தேர்ந்தெடுக்கலாம்.
2) ரூபாய் விலை மதிப்பு சராசரியாக்கத்தின் மூலம் அபாயத்தைக் குறைக்கிறது.
அது உங்கள் விலைகளின் சராசரியை காண ஒரு வாய்ப்பை வழங்குவதால் பெரும்பாலான ஆய்வாளர்கள் அல்லது முதலீட்டாளர்கள் முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்களின் வழியாக முதலீடு செய்யுமாறு பரிந்துரைக்கிறார்கள். இருப்பினும் உங்களால் சந்தை நகர்வுகளை முன்கூட்டி கணிக்க முடியாது.
3) வட்டி கூட்டுத் தொகையாக்கத்தின் திறனைப் பொறுத்து வரவு இருக்கும்.
சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் கூட நீண்ட காலத்திற்குச் செல்வத்தைச் சேகரிக்க முடியும். முதலீடும் வரவும் பெரும்பாலும் கூட்டு வட்டி தொகையாக்கத்தைச் சார்ந்து இருப்பதால், உயர்ந்த வருமான வரவைத் திரும்பப் பெறச் சீக்கிரமாக முதலீட்டைத் தொடங்குவது சிறந்தது.
4) எஸ்ஐபி (SIP) பங்குகளின் மீது வரிவிதிப்பு.
ஒரு வருடத்திற்கும் அதிகமாகப் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் எஸ்ஐபி (SIP) எந்த மூலதன ஆதாயத்தையும் ஈர்க்காது.
5) பல்வகை முதலீடு
பணம் செலுத்துவதில் ஒழுக்கமான அணுகுமுறை கொண்ட தனி நபர்கள் உங்கள் தேவைகளுக்கேற்ப வரவுகளை மேம்படுத்த பல்வேறு எஸ்ஐபி (SIP) களின் விதவிதமான திட்டங்களின் வழியாகப் பல்வகைப்படுத்தலாம்.