பொதுவாகச் சந்தையில் அரசு நிறுவனங்கள் மற்றும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அது வேலையாக இருந்தாலும் சரி, முதலீடாக இருந்தாலும் சரி. இதற்குக் காரணம் பாதுகாப்பு.
ஐபிஓ பற்றி வலம் வரும் சூடான செய்தி மற்றும் கிசுகிசு என்னவென்றால் முதலாளிகள் அவர்களின் நிறுவனங்களைப் பொது நிறுவனங்களாக்குவதன் மூலம் எவ்வளவு லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பதைப் பற்றிய புள்ளி விவரங்களைத் தெரிவிக்கிறது.
இந்தப் பட்டியலில் நாம் இப்போது வணிக உலகின் பாடப்படாத நாயகர்களான இருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு இருக்கும் நன்மையைப் பற்றியே பார்க்கப்போகிறோம்.
முதலீட்டாளர்கள் நெருக்கடி
தனியார் நிறுவனத்திற்கு அதன் நிதி சார்ந்த முடிவுகளைப் பொது மக்களிடம் வெளியிட வேண்டிய கடமை இல்லை அதே சமயம் பொது நிறுவனத்திற்கு ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறை அறிக்கை வெளியிட வேண்டிய தேவை இருக்கிறது.
அதாவது, அவர்கள் பங்குதாரர்கள் அல்லது பகுப்பாய்வாளர்களின் எதிர்பார்ப்புகளின் குறுகிய கால அழுத்தங்களிலிருந்து ஒப்பீட்டளவில் விடுதலை பெற்றிருக்கிறார்கள்.
வியாபார தந்திரம்
தனியார் நிறுவனங்கள் அவர்களுடைய வியாபார விவரங்களைப் பொது மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. போட்டி என்ற விஷயத்திற்கு வரும் போது அது பயனுள்ளதாக இருக்கும்.
நாமெல்லாம் அறிந்தபடி, போட்டியாளர்கள் உங்கள் வியாபார ரகசியங்களைத் தெரிந்து கொண்டால் அது பாதகமாகும்.
சுதந்திரம்
தனியார் நிறுவனங்களுக்கு நீண்ட கால வளர்ச்சி உத்திகளில் முதலீடு செய்வது எளிது. கண் கூடாக அந்த நிறுவனங்களால் குறுகிய கால இலக்குகளை உருவாக்க முடியும் ஆனால் அவை உடனடியாக லாபமளிக்காத ஆர் அண்ட் டி மற்றும் பல முதலீடுகளில் சுதந்திரமாக முயற்சி செய்யலாம்.
அதிகார முறை கட்டுப்பாடு
தனியார் நிறுவனத்திற்குப் பெருநிறுவனங்களின் அதிகார முறை கட்டுப்பாடு என்ற விஷயத்திற்கு வரும் போது அதிகச் சுதந்திரமும் நெகிழ்வுத்தன்மையும் உள்ளது.
அதே சமயம் பொது நிறுவனங்களுக்குத் துல்லியமான மற்றும் தற்போதைய கணக்கியல் நடைமுறைகள் பொருந்தும், ஆனால் தனியார் நிறுவனங்கள் பொது நிறுவனங்களுக்குப் பொருந்தக்கூடிய சிக்கலான விதிமுறைகள் மற்றும் தரகட்டுப்பாடுகளைச் சந்திக்க வேண்டியதில்லை.
அதிகாரம்
தனியார் வணிக உரிமையாளர் அவர் அல்லது அவள் சட்டத்தின் கீழ் கட்டுப்பட்டுச் செயல்படும் வரை எந்தவொரு முறைசார்ந்த அதிகாரத்தினருக்கும் பதிலளிக்கத் தேவையில்லை.
எனவே அவர்களுக்கு வணிக நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் எடுப்பதில் அதிகப்படியான அதிகாரம் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications