உங்கள் குறிக்கோள்கள் மற்றும் உங்கள் முதலீட்டு எல்லைகளின் அடிப்படையில், பரஸ்பர நிதியானது உங்கள் முதலீட்டினை, வெவ்வேறு சொத்து வகைகளான பங்கு வர்த்தகம், கடன்கள், மற்றும் தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்யத் தூண்டுகிறது. இது உங்கள் முதலீட்டினை பிரித்து வைத்திடவும், சந்தை அபாயங்களைக் குறைக்கவும் அனுமதிக்கிறது.
பங்கு நிதிகள் / வளர்ச்சி நிதிகள்
பங்குகளில் முதலீடு செய்யப்படும் நிதி பங்குநிதி எனப்படும். இவை குறைந்த காலம் முதல் நீண்ட கால முதலீட்டு விருப்பங்களை மதிப்பீடு செய்கின்றன. பங்கு நிதிகள் அதிக அபாயங்களுக்குட்பட்டவை, அவற்றின் முதிர்வுகள் பங்கு சந்தையின் விளைவுகளைப் பொறுத்தே அமைகின்றன. நீண்ட கால வளர்ச்சியை விரும்புவோருக்கு இவை நல்ல ஒரு முதலீட்டுத் தேர்வாக அமைகின்றன. பங்கு நிதியில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அவை, பல்வகைப்பட்ட நிதிகள், துறை குறிப்பிட்ட நிதிகள் மற்றும் குறியீடு சார்ந்த நிதிகள்.
பல்வகைப்பட்ட நிதிகள்
இந்த நிதிகள் உங்களுக்குத் துறைகள் சார்ந்த பல்வேறு நிறுவனங்களிலும், சந்தை முதலீடுகளிலும் உங்களின் நிதியைப் பிரித்து முதலீடு செய்து, முதலீட்டுப் பயன்களை அடையச் செய்கின்றன. ஒரு குறிப்பிட்ட துறையுடன் முடங்கி விடாமல் சந்தையில் தங்களின் இருப்பினைக் காட்டிக்கொள்ள விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இவை உதவுகின்றன.
துறை சார்ந்த நிதிகள்
இவை துவக்கத்தில் ஒரு தொழிற்சாலையிலோ அல்லது ஒரு வியாபார துறையிலோ உள்ள நிறுவனங்களின் பங்கு சந்தை நிதிகளில் முதலீடு செய்ய வைக்கும். இவை அதிகப் பிற்காலப் பயன்களைத் தருவதாயிருந்தாலும், பல்வகைப்பட்ட நிதிகளை விட அதிகச் சந்தை அபாயங்களுக்குட்பட்டவை. முதலீட்டாளர்கள் இந்தத் துறைகளின் தொழில்களின் செயல்பாட்டை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டே இருந்து சரியான நேரத்தில் அவற்றிலிருந்து வெளியே வர வேண்டும்.
குறியீடு நிதிகள்
இவை பிரபலமான பங்குச் சந்தை குறியீடுகளான CNX நிப்டி குறியீடு மற்றும் S&P BSE சென்செக்ஸ் ஆகியவற்றில் செய்யப்படும் முதலீடுகளாகும். குறியீடு நிதியின் மதிப்பு அந்த நிறுவனத்தின் பணி குறியீட்டினைப் பொறுத்து ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வேறுபடும். அந்த நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் இறக்கம் ஆகிய குறியீடுகளின் அடிப்படையில் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்குட்படும். பனிக் குறியீட்டின் கண்காணிப்புப் பிழையினைப் பொறுத்து அவ்வப்போது மாறுபடும்.
வரிச் சேமிப்பு நிதிகள்
இந்திய வருமான வரிச் சட்டம் 1961ன் படி வரிச் சலுகைகளை இந்த நிதிகள் பெறும். இந்தத் திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் 1961 ன் கீழ், பிரிவு 80 C ன் கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கும். வரிச் சலுகை மற்றும் நீண்ட கால வளர்ச்சியை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு மிகச் சரியான தேர்வாகும்.
கடன் நிதிகள் / குறித்த வருமான நிதிகள்
இவை கடன் / குறித்த வருமான பங்குகளான நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள், அரசுத் துறை பங்குகள், வர்த்தக முதலீடுகள் மற்றும் பல பணச் சந்தை கருவிகளில் முதலீடு செய்வதாகும். அபாயங்கள் தவிர்க்கும் முறையான தொடர்ச்சியான வருமானம் விரும்பும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஏற்றவையாகும். பங்கு நிதிகளுடன் ஒப்பிடும்போது சந்தை அபாயங்கள் குறைந்தவையாக உள்ளன.
பணமாக்கும் நிதிகள் / பணச் சந்தை நிதிகள்
இவை பணச் சந்தைக் கருவிகளில் முதலீடு செய்து எளிதில் பணமாகிட உதவும். இவற்றின் முதலீட்டுக்காலம் ஒரு நாளைக்கும் குறைவாக இருக்கும். நிறுவனங்கள், நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் குறைந்த கால முதலீடு செய்ய விரும்பும்போது இவை உகந்ததாயிருக்கும்.
தங்க முலாம் நிதிகள்
சந்தை அபாயங்களை விரும்பாதவர்களுக்கு மத்திய மாநில அரசுகளின் பங்குகளில் குறுகிய கால நீண்ட கால முதலீடுகள் செய்வோர்க்கு உகந்தவை. அரசு பங்குகள் எந்த வித அபாயங்களுக்கும் உட்படாதவை.
சமச்சீர் நிதிகள்
பங்கு நிதிகள் மற்றும் கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்து நிலையான வளர்ச்சி மற்றும் வருமானம் தரும் முதலீட்டிற்கு உகந்தவை. குறைந்த அபாயங்களுடன் குறுகிய நீண்ட கால முதலீடுகளுக்கு ஏற்றவை.
பரிமாற்ற வர்த்தக நிதிகள் (ETF)
பரிமாற்ற வர்த்தக நிதிகள் பங்கு சந்தைப் பங்குகளிலும், சந்தைப் பொருள்களிலும் முதலீடு செய்வதற்கான குறியீடுகளை உள்ளடக்கியதாகும். இவை பொருள்கள், நிறுவனங்களின் பண்டக இருப்புகள், மதிப்புவாய்ந்த உலோகங்கள் அல்லது பணம் ஆகியவற்றின் கையிருப்பினை பொறுத்துச் செய்யப்படுபவை. பங்குச் சந்தையில் நாள் முழுதும் சிறு பங்குகளை வாங்க, விற்க நெகிழ்வுத் தன்மையுடன் கூடியவையாக இவை இருக்கும்.