எஸ்ஐபி என்பது முறைப்படுத்தப்பட்ட நிலையான முதலீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வதும் ஒன்று.
மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் குறைந்தது 5000 ரூபாய் முதலீசு செய்ய வேண்டும் என்பதால் முதலீடுகள் குறைவாகவே இருந்தது. மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகக் குறைந்தது 500 ரூபாய் முதல் மாத மாதம் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக எஸ்ஐபி திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
எனவே இந்த எஸ்ஐபி திட்டங்களில் எப்படிக் கணக்கை துவங்குவது மற்றும் முதலீடு செய்வது என்பது பற்றி விளக்கமாக இங்குப் பார்ப்போம்.
உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி)
அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் ஒரு புகைப்படத்தைச் சமர்ப்பியுங்கள். மேலும், நீங்கள் உயிருடன் இருப்பதை நேரடி பரிசோதனை அல்லது (ஐபிவி) ஈ கேஒய்சி எனப்படும் மின்னணு முறை வழியாக நிதி இல்லத்திற்கு உறுதி செய்யுங்கள்.
இ-கேஒய்சி க்கான நிதி இல்லங்கள் அல்லது பதிவாளர்கள்
ஒருவேளை உங்கள் நிதி நிறுவனம் ஈ கேஒய்சி வசதிக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், காம்ஸ் கேஆர்ஏ அல்லது கார்வி இணையத்தளத்திற்குள் உள்நுழைந்து உங்கள் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
ஆன்லைன் பணப் பரிவர்த்தனை கணக்கை உருவாக்குங்கள்
ஒருமுறை உங்கள் கேஒய்சி இணக்கமான பிறகு, பரஸ்பர நிதி நிறுவனத்தின் இணையத் தளத்திற்கு வருகை தாருங்கள். ஒரு ஆன்லைன் பணப்பரிவர்த்தனை கணக்கை உருவாக்க புதிய கணக்குகளுக்கான பதிவு இணைப்பைத் தேடுங்கள்.
திட்டத்தின் பெயர், சிப் மற்றும் தேதியை சரிபாருங்கள்
உங்கள் கணக்கிற்குள் உள்நுழைந்து, பரஸ்பர நிதித் திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள், பிறகு ஒரு சிப் தேதியை தேர்வு செய்து உங்கள் வேண்டுகோளைச் சமர்ப்பியுங்கள்.
வாழ்த்துக்கள்
நீங்கள் உங்கள் சிப் திட்டத்தைத் தற்போது தொடங்கிவிட்டீர்கள்.
இப்போது, சந்தை நிலைமைகளைப் பற்றிக் கவலைப்படாமல், நீண்டகாலத்திற்கான செல்வத்தை உருவாக்கத் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள்.