ஈக்விட்டி சேமிப்புத் திட்டம் என்றால் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈக்விட்டி சேவிங்க்ஸ் எனப்படும் சமபங்கு சேமிப்புத் திட்டம் பரஸ்பர நிதி வகையைச் சேர்ந்தது இது மிதமான அபாயம் எடுக்கும் பசி கொண்ட மற்றும் பங்குகளிலிருந்து மூலதன வருவாய் மற்றும் வழக்கமான வருமான ஓட்டத்தை அறுவடை செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்குப் பொருத்தமானது.

 

சமபங்கு சேமிப்புத் திட்டங்கள் நிதித் தொகையில் 1/3 பகுதியை நிலையான வருமானத் திட்டங்களிலும், 1/3 பகுதியை பங்குக் கலவையிலும், மீதமுள்ளத் தொகையை முதலீடற்றத் தரகுத் தொகையிலும் முதலீடு செய்கிறது.

 

எனவே நீங்கள் ஒரு பழமைவாத முதலீட்டாளர் பிரிவில் விழுந்து, இருப்பினும் இன்னமும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டுமென்றும் மற்றும் சில அபாயங்களுக்கும் இடமளிக்க வேண்டுமென்றும் விரும்பினால், நீங்கள் சமபங்குச் சேமிப்புத் திட்டத்தைக் கருத்தில் கொள்ளலாம். ஏனென்றால், அவை உயர்ந்த முன் வரி வருவாயை வழங்குகின்றன. இதனால் இந்த நிதிகள், மேலும் வரித் திறனையும் கொண்டுள்ளதால் ஒரு கூடுதல் நன்மையையும் வழங்குகின்றது. எனவே, இங்கே பங்கு சேமிப்புத் திட்டங்களை நல்லதொரு பந்தயமாக ஆக்கும் சில மதிப்புமிக்க கண்டறியப்பட்ட சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஈக்விட்டி சேமிப்புத் திட்டம் என்றால் என்ன?

1. பங்குச் சந்தை நிதிகளோடு ஒப்பிடுகையில் சமபங்கு சேமிப்பு நிதிகள் குறைந்த மாறும் தன்மைகளை வழங்குகின்றன: 50% மேலான மூலதனம், கடன் மற்றும் தரகு செலவாணியிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளதால், இந்தத் திட்டம் நிலையான முதலீட்டை வழங்குகிறது. நிலையற்ற மாறும்தன்மையைக் குறைக்க நிதி மேலாளர்கள் வழித்தோன்றல்களாக கண்டுபிடிக்கப்பட்ட உபாயத் திட்டங்களைப் பயன்படுத்துகின்றனர். மேலும் நிதியின் தரகு செலாவணிக் கூறுகள் சந்தையின் வெவ்வேறு பகுதிகளின் விலை வேறுபாடுகளின் மீது முதலீடு செய்யப்படுகின்றன. எனவே ஆய்வாளர்களின் கூற்றுப்படி, நீங்கள் வருமானத்தில் நிலைப்புத்தன்மையைத் தேடுபவராக இருந்தால், பங்கு சேமிப்பு நிதிகள் உங்களுக்கானது. இல்லையென்றால், உயர் வருமானத்தைத் தேடுபவர்கள் மற்றும் அபாயங்களில் ஏராளமான பசி கொண்டவர்கள் தூய பங்குச் சந்தை நிதிகளில் முதலீடு செய்யலாம்.

2. வரிச் செயல்திறன்: வரிவிதிப்பு நோக்கத்திற்காக பங்கு சேமிப்புத் திட்டங்கள் பங்குச் சந்தை நிதிகளாகக் கருதப்படுகின்றன. ஒருவேளை இந்தத் திட்டத்தை ஒரு வருடத்திற்கும் மேல் வைத்திருந்தால் இதிலிருந்து கிடைக்கும் வருவாய்க்கு வரிகள் இல்லை. இருந்தாலும், ஒரு வருடத்திற்கு முன் திரும்பப் பெற்றுக் கொண்டால், குறுகிய கால மூலதன ஆதாய வரியாக 15% செலுத்தப்பட வேண்டும்.

ஈக்விட்டி சேமிப்புத் திட்டம் என்றால் என்ன?

தரகுச் செலாவணித் திட்டங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிகள் நிலையான வருமானத்தை ஈட்ட இந்தத் திட்டத்திற்கு உதவுகின்றன மேலும் ஏஎம்சி க்கள் தரகுச் செலாவணியைக் கையாள்வதிலும் மற்றும் குறைந்த அபாயம் கொண்ட வருவாயை வழங்குவதிலும் நிபுணர்கள்.

ஆரம்பத்திலேயே பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுதல் வெளியேறும் சுமைக் கட்டணமாக 1% உடன் வருவதால், முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தை ஒரு வருடத்திற்கும் மேல் வைத்திருக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is Equity Savings Scheme?

What is Equity Savings Scheme? - Tamil Goodreturns | ஈக்விட்டி சேமிப்புத் திட்டம் என்றால் என்ன? - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Friday, September 8, 2017, 20:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X