இன்சூரன்ஸ் பாலிசியுடன் ஆதார் எண்ணை 2017 டிசம்பர் 31-க்குள் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் மோசடிகள் தவிர்க்கப்படும் என்றும் கப்பீடு செய்துள்ளவர்கள் வரவேற்றுள்ளனர்.
ஆனால் இதில் என்ன பிரச்சனை என்றால் இன்னும் ஒரு மாதத்திற்குள் செய்ய வேண்டும் என்பது ஆகும். எனவே இந்த இணைப்பினை செய்யவில்லை என்றால் உங்கள் பாலிசி என்ன ஆகும் என்ற விவரங்களைப் பார்க்கலாம்.
இணைப்பை செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?
இன்சூரன்ஸ் திட்டத்துடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் முதிர்வடையும் வரை அல்லது பணத்தினைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கை வைக்கும் வரை பாலிசி தொடர்ந்து செயல்படும். ஆதார் எண்ணை சமர்ப்பித்த பிறகே பணத்தினைப் பெற முடியும்.
மருத்துவக் காப்பீடு
மருத்துவக் காப்பீடு எடுத்துள்ளவர்களுக்குத் தான் இதில் சிக்கல். ஆதார் இணைப்பினை செய்யாமல் மருத்துவச் செலவிற்கான பணத்தினைப் பெற முடியாது. ஆனால் இதற்குக் காப்பீடு துறை விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. புதிய விதிகள் வரும் வரை இந்த விதிகள் தான் பின்பற்றப்படும்.
எனவே முன்கூடியே ஆதார் இணைப்பினை செய்து வைப்பது நல்லது.
பொதுக் காப்பீடு திட்டங்கள்
பொதுக் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு அந்த விதிகள் பொருந்தும். ரீடெய்ல் பாலிசிகளுக்கு மட்டும் தான் இந்த ஆதார் இணைப்புக் கட்டாயம். குழு வணிகம் போன்றவற்றுக்குத் தேவையில்லை.
பண மோசடி சட்டம்
மத்திய அரசு பண மோசடி சட்டத்தின் கீழ் காப்பீடு திட்டங்களைப் பெறும் போது பான் மற்றும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.