ஈபிஎப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டம் மூலமாகவும் ஓய்வூதியம் பெறலாம் என்று உங்களுக்குத் தெரியுமா? ஈபிஎ பென்ஷன் அல்லது ஈபிஎஸ் எனப்படுவது ஒழுங்கமைக்கப்பட்ட துறை சார்ந்த ஊழியர்களுக்கு அளிக்கப்படுகின்றது.
ஓய்வு காலத்தில் உத்திரவாதமாக ஈபிஎஸ் திட்டமானது மாதாந்திர ஓய்வூதியத்தினை அளிக்கிறது. மத்திய அரசின் கீழ் வரும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் அனைத்து ஊழியர்களுக்கு இந்தப் பென்ஷன் திட்டத்தினை வழங்குகிறது.
ஈபிஎஸ் என்றால் என்ன?
ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் எனப்படும் ஈபிஎஸ் ஆனது என்னவென்று பல ஊழியர்களுக்குத் தெரிவதில்லை. ஈபிஎஸ் மற்றும் ஈபிஎப் இரண்டும் ஒருகினைக்கப்பட்ட ஒரு சேவையாகும். ஈபிஎப்-ல் பெறப்படும் தொகையானது வருங்கால வைப்பு நிதி மட்டும் இல்லாமல் உங்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய திட்டமாகவும் பயன்பெறும்.
குறைந்தபட்ச பென்ஷன் தொகை
மத்திய அரசு தற்போது குறைந்தபட்ச பென்ஷன் தொகை அளவினை உயர்த்தியுள்ளது. ஈபிஎஸ் திட்டம் மூலமாகக் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் ஓய்வூதியமாகப் பெற முடியும்.
பங்களிப்பு விகிதம்
தனிநபர் ஒருவரின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் மற்றும் நிறுவனம் சார்பாக 12 சதவீதமும் ஈபிஎப் ஆகப் பிடித்தம் செய்யப்படுவது வழக்கம். அதில் 8.33 சதவீதம் என அதிகபட்சம் மாதம் 1250 ரூபாய் வரை ஓய்வூதிய திட்டமான ஈபிஎஸ்-க்கு அளிக்கப்படுகிறது.
பென்ஷன் எப்போது கிடைக்கும்?
ஈபிஎஸ் திட்டத்தின் கீழ் பெஷன் பெறப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. பெஷன் பெற விரும்புபவர்கள் 58 வயது வரை காத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 வருடம் வரை ஈபிஎப் திட்டத்தில் பங்குகளிப்பு அளித்து இருந்தால் மட்டுமே ஓய்வூதிய பெற முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட ஈபிஎப் கணக்கை வைத்து இருக்க முடியாது. தனது வாழ்க்கை முழுவதும் ஓய்வூதியம் பெற முடியும். பின்னர்த் தன்னைச் சார்ந்திருந்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வாய்ப்பு உண்டு.